Wednesday, June 30, 2010

(20) இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு.

இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு.

மூஸா நபி (அலை)அவர்களிடம் இறைவன் "ஓ மூஸாவே!நீர் எனக்காக என்னென்ன நற்கிரியைகள் செய்தீர்கள்?" என வினவினான்.

அதற்கு மூஸா(அலை) அவர்கள் "இறைவா!நான் உனக்காகவே நோன்பு நோற்றேன்.தொழுதேன்.திக்று செய்தேன்.தஸ்பீஹ் செய்கிறேன்.நீ எனக்களித்த கடமைகளை நிறைவேற்றினேன்"என்றார்கள்.

அதற்கு இறைவன்"ஓ..மூஸாவே...ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை விரைவில் கடந்து செல்வதற்காக தொழுதீர்.நரகைவிட்டு உம்மை பாதுகாத்துக்கொள்ள நோன்பு நோற்றீர்.உமக்கு சொர்க்கத்தில் பதவி உயர்த்தப்படுவதற்காக தஸ்பீஹ் செய்தீர். உமக்கிடப்பட்ட கடமைகள் நிறை வேற்ற வேண்டும் என்பதற்காக இவை அனைத்தையும் செய்தீர்.இவை யாவும் உமக்காக செய்து வந்த கடமைகள்.எனினும் எனக்காக ஏதேனும் நற்கரியைகள்செய்தீரா?" என்று கேட்டான்.

அப்படிப்பட்ட இறைவனுக்கு ஆற்ற வேண்டிய நற்கிரியைகள் எதுவென மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ் இடத்தில் கேட்டபொழுது இறைவன் ஆறு கடமைகளை இயம்பினான்.

1.ஓ..மூஸாவே!பசித்தோருக்கு உணவளித்து பசியை ஆற்றுவீராக!

2.ஓ..மூஸாவே!தாகித்தோருக்கு நீரளித்து தாகத்தை நீக்குவீராக!

3.ஓ..மூஸாவே!உமது ஒவ்வொருபேச்சையும்,செயலையும் முகஸ்துதியைவிட்டும் பாதுகாத்துக்கொள்வீராக!

4..ஓ..மூஸாவே! அபயம் தேடுவோருக்கு அபயம் அளிப்பீராக!

5..ஓ..மூஸாவே!அநீதத்துகுள்ளானவர்களுக்கு ஆதரவு அளிப்பீர்களாக!

6..ஓ..மூஸாவே!அறிஞர்கள்(ஆலிம்)களுக்கு சங்கை செய்வீர்களாக!

இவ்வாறு இறைவன் இயம்பியதாக ரசூல் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

2 comments:

ஜெய்லானி said...

இதை நினைத்துதான் அடிக்கடி பயம் வரும். நல்ல பதிவு..

ஸாதிகா said...

///இதை நினைத்துதான் அடிக்கடி பயம் வரும்./// உண்மைதான் சகோ ஜெய்லானி.