Sunday, October 10, 2010

முஸ்தலிஃபா


முஸ்தலிஃபா என்பது மினாவுக்கும்,அரஃபாத்துக்கும் இடையில் உள்ள ஒரு இடமாகும்.இந்த இடத்தைப்பற்றி அல்லாஹ் அல் குர் ஆனில் கூறுகின்றான்."நீங்கள் அரஃபாவிலிருந்து திரும்பினால் 'மஷ் அருல் ஹராம்'என்னுமிடத்தில் அல்லாஹவை திக்ரு செய்யுங்கள்"(2:198) என்று.இங்கு குர் ஆனில் சொல்லப்பட்ட இடம் முஸ்தலிஃபா ஆகும்.

துல் ஹஜ் மாதம் 9,10 ஆவது நாள்களுக்கு இடையே உள்ள இரவில் ஹாஜிகள் இங்கே தங்க வேண்டும்.அதைத்தான் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.முஸ்தலிஃபாவில் உள்ள பள்ளிவாசலுக்கு பெயர்தான் 'மஸ்ஜிதுல் ஹராம்' என்பதாகும்.இந்த பள் ளியில் தொழுவது சிறப்புக்குறிய காரியமாகும்.இங்கேயும்,முஸ்தலிஃபா ,மைதானத்திலும் துஆ ஒப்புக்கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.

நபி (ஸல்)அவர்கள் ஹஜ் செய்த பொழுது துல்ஹஜ் பிறை 9ஆம் நாள் சூரியன் மறைந்த பிறகு அரஃபாவிலிருந்து புறப்பட்டு,இரவானதும் முஸ்தலிஃபா வந்து சேர்ந்தார்கள்.இங்கு மஃரிப்,இஷா தொழுகை இரண்டையும் ஒரு பாங்கு,ஒரு இகாமத் சொல்லித்தொழுதார்கள்.இரண்டுக்குமிடையிலோ,அதற்கு பின்போ யாதொரு நபில் தொழுகையும் தொழுகவில்லை.சுபுஹு தொழுகையை விரைவாக தொழுது விட்டு தல்பியா ஓதியவாறு மினாவுக்குப்புறப்பட்டனர்.அப்போது கல்லெறிவதற்காக நபி(ஸல்)அவர்கள் கேட்டதன் படி இபுனு அப்பாஸ்(ரலி) அவர்கள் பொடிக்கற்களைப் பொறுக்கிக்கொடுத்தனர்.

இதன் படி அங்கே ஹாஜிகள் 70 பொடிக் கற்களைப் பொறுக்கிக்கொள்ள வேண்டும்.பாலைவனம் நிறைந்த அந்த நாட்டில் முஸ்தலிஃபாவில் மட்டும் எங்கு பார்த்தாலும் பொடிக்கற்களாவே தென் படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ஹாஜிகள் கல் பொறுக்குகின்றனர்.கல் பற்றாக்குறை வருவதே இல்லை.இது அல்லாஹ்வின் அற்புதமாக உள்ளது.இந்த இடம் துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதில் விஷேஷ அந்தஸ்த்தைப்பெறுகின்றது.

முஸ்தலிஃபாவில் தங்கிய ஹாஜிகள் அனைவரும் மினாவை நோக்கி நகர்ந்து செல்வர்,அப்போது ஒரே மைதானத்தில் ஹாஜிகள் அனைவரையும் பார்க்கும் பொழுது மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு முன்னால் எல்லா மனிதர்களும் நிறுத்தப்படும் காட்சி நினைவுக்கு வரும்.

ஒளி,ஒலிக்காட்சிகளைக்காண இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

ஜெய்லானி said...

ஜஸாக்கல்லாஹ் க்கைர்

Unknown said...

அருமையான தொகுப்பு.அல்ஹம்துலில்லாஹ்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

, kaRkaL kuRaiyaathathu mika aassariyam

ஸாதிகா said...

சகோதரர் ஜெய்லானி மர்யம் ஜலீலா கறுத்துக்கு மிக்க நன்றி!