
நபிகள் நாயகம் அவதரித்தார்
இந்த அகிலம் முழுதும் ஆதரித்தார்
வேண்டிய வாழ்வு நமக்களிக்க
ஏகன் இறையை வேண்டிடுவார்
துன்பங்கள் நீங்கி சுகம் அளிக்க
துயரங்கள் இல்லா வாழ்வாங்க
நிம்மதியான நெஞ்சம் பெற
தூய இறையிடம் பரிந்துரைப்பார்
இறைவனை என்றும் நினைவு கொள்வோம்
இறைத்தூதரின் சொற்படி வழி நடப்போம்
இறைவனைத்தொழுதே துதித்திடுவோம்
இறை அச்சமுடன் நாம் வாழ்ந்திடுவோம்
எரியும் பகையினை அணைத்திடவே
அவன் பால் உலகை உயர்த்திடவே
தகிக்கும் பொறாமை தணிந்திடவே
வெறுக்கும் அவாவை ஒழித்திடவே
மனதினில் நாமே உறுதிகொள்வோம்
தொண்டால் நாமும் நிலைத்திடுவோம்
கற்றதன் பலனை கண்டிடுவோம்
இறைநபி வழியில் சென்றிடுவோம்
அத்தனை நலமும் நாம் பெறுவோம்
நம் நெஞ்சங்கள் நிறைந்திடும் இறை நினைவில்
5 comments:
சல்லல்லாஹு ஆலா முஹம்மத்
சல்லலாஹு அலைஹி வசல்லம்
நன்றி சகோதரரே!
ஸ்ல்லல்லாஹூ அலாமுஹம்மத்
ஸ்ல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்.
//நிறைந்திடும் நெஞ்சம்//
மனமெல்லாம் நிறைந்து விட்டது சகோதரி. நன்றி!
மிகவும் நன்றி சகோதரர் ஸ்டார்ஜன், அப்துல் காதர்
Post a Comment