Friday, July 9, 2010

மிஃராஜ்

தன் அடியாரை சங்கைமிகு பள்ளியிலிருந்து ,(வெகு தொலைவான)அக்ஸா பள்ளிவாசலின் பால்,ஒரு இரவில் இரவுப்பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிக பரிசுத்தமானவன்.(மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய)அது எத்தகையது என்றால்நாம் அதை சுற்றிஉள்ள பகுதியை அபிவிருத்தியடைய செய்து இருகின்றோம்.நம்முடைய அத்தாட்சிகளைஅவருக்கு நாம் காண்பிப்பதற்காக (அழைத்துச்சென்றோம்)நிச்சயாமாக அவனே அனைத்தையும் செவியுறுபவானாகவும்,பார்ப்போனாகவும் இருகின்றான்.
அல்குர் ஆன் - 17:1

கஹ்பாவின் தாழ்வாரத்தில் ஹதீம் அல்லது ஹஜ்ரு என்னும் இடத்தில் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருக்களித்து சாய்ந்து படுத்திருக்கும் நிலையில்,தூக்கத்திற்கும்,விழிப்பிற்கும் இடையே உள்ள நிலையில் நாயகம் (ஸல்)அவர்கள் இருந்த பொழுது ஜிப்ரீல் (அலை)
அவர்களால் அல்லாஹ்வின் ஆணைப்படி விண்ணுக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள்.

கோவேருக்கழுதைக்கு சற்றுத்தாழ்வாகவும்,கழுதைக்கு சற்று உயரமாகவும் ஒரு வெண்மை நிறத்திலான உயிர் பிராணி (புராக்) பெருமானார் முன் கொண்டுவரப்பட்டது.அதன் வேகம் எத்தகையது என்றால் அது தன் பார்வை செல்லும் தூரத்திற்கு ஒரு அடி வைத்து தாண்டி விடும் ஆற்றலுடையது.அதில் பெருமானார்(ஸல்) அவர்கள் அமரவைக்கப்பட்டு ஜிப்ரீல் (அலை) அவர்களால் விண்ணுலகிற்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள்.

1 வது வானத்தில் ஆதம் (அலை)அவர்களும்
2 வது வானத்தில் யஹ்யா(அலை)
3 வது வானத்தில் யூஸுஃப் (அலை)அவர்களும்
4 வது வானத்தில் இத்ரீஸ் (அலை)அவர்களும்
5 வது வானத்தில் ஹாரூன் (அலை)அவர்களும
6 வது வானத்தில் மூஸா (அலை)அவர்களும்
7 வது வானத்தில் இப்றாஹீம்(அலை)அவர்களும் இருந்தார்கள்.

வானலோகத்தில் ஒவ்வொரு அடுக்கிலும் இருந்த நபிமார்களை ஹாத்தமுன் நபிய்யீன்(ஸல்)அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை)அவர்கள்தாம் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். நபிமார்களை சந்தித்து நல்லாசி பெற்றார்கள்.

ஆறாவது வானத்தில் இருந்த மூஸா (அலை) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களைக்கண்டு அழுதனர்.காரணம் கேட்டபொழுது" நிச்சயமாக எனக்குப்பின் நபியாக அனுப்பப்பட்ட ஓர் இளைஞருடைய சமூகத்தினர்,என் சமூகத்தினரை விட அதிகளவு சுவனபதி செல்வார்கள் என்று எண்ணி அழுகின்றேன்"என்றார்கள்.

திட்டமாக மற்றொரு முறை இறங்குகையில் அவரை(ஜிப்ரீலை) அவரது சுய உருவில் கண்டனர்.அல்குர் ஆன் 3:13

"ஸித்ரத்துல் முண்தஹா"என்னும் (இலந்தை) மரத்தின் எல்லையில் இக்காட்சி நிகழ்ந்தது.அல்குர் ஆன் 3:14

அவ்விடத்தில்தான் நல்லடியார்கள் தங்கும் சுவர்க்கம் இருக்கின்றது.அல்குர் ஆன் 3:15

பின்னர் ஸித்ரத்துல் முண்தஹா என்னும் சுவனபதிக்கு மேல்கோடியிலுள்ள ஒரு இலந்தைமர நிழலுக்கு அழைத்து வரப்பட்ட நபி(ஸல்)அவர்கள் அம்மரத்தை நோக்கினார்கள்.அதன் பழம் குடம் போலும்,இலைகள் யானையின் காது போன்றும் தோற்றம் அளித்தது.அந்த மரத்தின் அடிப்பாகத்தில் இருந்து நாண்கு ஆறுகள் ஒலித்தோடிக்கொண்டிருந்தன.அவற்றில் இரண்டு வெளிப்புறத்திலும்,இரண்டு மறைவாகவும் இருந்தன.

அதனை கண்ணுற்ற நபி(ஸல்)அவர்கள் ஜிப்ரீல்(அலை)அவர்களிடம் "இவை இரண்டும் என்ன?"என்று கேட்டனர்.
"மறைவாக உள்ள இரண்டும் சுவனபதியில் உள்ளவைகளாகும்.வெளிப்புறமாக உள்ள மற்ற இரண்டும்நைல் நதியும்,புராத் நதியுமாகும்"என்று ஜிப்ரீல் (அலை)அவர்கள் பதிலுறுத்தனர்.

பிறகு பைத்துல் மஃமூர்(வானவரின் பள்ளி)க்கு அழைத்துச்சென்று நபி(ஸல்)அவர்களுக்கு பால் வழங்கப்பட்டது.

பிறகு ஆறாவது வானத்திற்கு வந்துகொண்டிருந்த பொழுதுமூஸா (அலை )அவர்கள் "என்ன கட்டளை பெற்றீர்கள்?"என்று கேட்டார்கள்.
"50 வேளை தொழுகை செய்யும் படி கட்டளை பெற்றேன்"
"நிச்சயமாக உங்களது சமூகத்தினர் இதனை ஆற்றுவதற்கு ஆற்றலற்றவர்கள்.இறைவன் ஆணையாக நான் உங்களுக்கு முன் மக்களை சோதித்துப்பார்த்தேன்.எனவே மீண்டும் இறைவனிடம் சென்று தொழுகையை இன்னும் இலகுவாக்கும் படி கோருங்கள்" என்றனர்.

இவ்விதமாக ஐவேளை தொழுகையைக் கட்டளையிடப்படும் வரை நபி(ஸல்)அவர்கள் இறைவனுக்கும் மூஸா(அலை)அவர்களுக்கும் இடையில் போய் வந்து கொண்டிருந்தார்கள்.

இருப்பினும் மூஸா (அலை) அவர்கள் "உங்களுடைய சமூகத்தினர் ஐவேளைத்தொழுகையைக்கூட தொழ ஆற்றல் பெற்று இருக்க மாட்டார்கள்.எனவே மீண்டும் இறைவனிடம் சென்று தொழுகையை மேலும் இலகுவாக்கும் படி கோருங்கள்"என்றார்கள்.

அதற்கு நபி(ஸல்)அவர்கள் "நிச்சயமாக நான் என் இறைவனிடம் வெட்கமுறும் வரை கேட்டு விட்டேன்.இப்பொழுது அந்த கட்டளைக்கு இணங்கி விட்டேன்.அதனை ஏற்றுக்கொண்டு விட்டேன்."என்றனர்.

அறிவித்தவர்கள்:அனஸ்,மாலிக்(ரலியல்லாஹு அன்ஹுன்ன
ஆதாரம்:புகாரி,முஸ்லிம்,நஸாயீ.திர்மிதி

நபியே!சூரியன் (உச்சியை விட்டு)சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (யுள்ள லுஹர்,அஸர்,ம்ஃரிப்,இஷா ஆகிய)தொழுகைகளை நிலை நிறுத்துவீராக!மேலு,பஜ்ரு தொழுகையையும் தொழுது வாரும்.நிச்சயமாக பஜ்ருடைய தொழுகையானது (வானவர்கள் வருகைக்குறியதாகும்)அல்குர் ஆன்-17:78 -

6 comments:

ஸ்வீட் said...

test

எம் அப்துல் காதர் said...

அருமையான பதிவு மேடம்!

ஸாதிகா said...

மிக்க நன்றி சகோதரர் அப்து காதர்.

ஜெய்லானி said...

//ஸிராத்துல் முண்தஹா //

என்பதை ஸித்ரதுல் முன்தஹா என்று மாற்றி படிக்கவும் . அர்த்தம் மாறி விடும்

ஜெய்லானி said...

நல்ல பகிர்வு..ஜஸாகல்லாஹ் க்கைர்

ஸாதிகா said...

தவறினை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி ஜெய்லானி .எழுத்துப்பிழையை அல்லாஹ் பொருத்தருள்வானாக!திருத்திவிட்டேன்.