Wednesday, September 22, 2010

நபிமொழி



ஏழு வகை மக்களுக்கு அல்லாஹ் மறுமையில் தன் நிழலில் இடம் அளிப்பான்.
1.நீதியுள்ள தலைவன்
2.வணக்கத்தில் மூழ்கிய இளைஞர்.
3.ஜமாஅத்காக மசூதி செல்பவர்.
4.அல்லாஹ்வுக்காக நட்பு கொள்பவர்.
5.விபச்சாரம் புரிய மறுக்கும் பெண்.
6.இடக்கைக்கு தெரியாமல் வலக்கையால் தர்மம் கொடுப்பவர்.
7.தனிமையில் இறைபக்தியில் மூழ்கி கண்ணீர் வடிப்பவர்.

அ:அபூ ஹுரைரா
ஆ:புகாரி,முஸ்லிம்,திர்மிதி,நஸாயீ

நபிமார்களின் வழிமுறைகள் நாண்கு.
1.நாணமுறுவது
2.நறுமணம் பூசுவது.
3.பல்துலக்குவது
4.மணம் புரிவது.

அ:அபூ ஐயூப்(ரலி)
ஆ:திர்மிதி

ஏழு செயல்கள் ஏற்படுமுன் நீங்கள் நற் செயலில் ஈடு பட்டு விடுங்கள்.
1.இறை நன்றியை மறக்கடித்து விடும் ஏழ்மை.
2.அநியாத்திற்கு உதவும் செல்வம்.
3.உடல் நலத்தைக்கெடுக்கும் நோய்
4.முதுமையில் ஏற்படும் இயலாமை
5.எதிர்பாராமல் ஏற்படும் இறப்பு.
6.தஜ்ஜாலின் வருகை
7.திடுக்கம் அளிக்கவல்ல மறுமை.

அ:அபூ ஹுரைரா
ஆ:முஸ்லிம்

நாண்கு விஷயங்களை நம்பாதவன் உண்மை விசுவாசி அல்ல
1.தையிப் கலிமாவை உறுதி பேணல்
2.இறப்பை நம்புதல்
3மறுமையை நம்புதல்
4.விதியை நம்புதல்

அ:அலி (ரலி)
ஆ:திர்மிதி

இறை நம்பிக்கையாளர்களிடம் இருக்காத இரு செயல்கள்
1.உலோபத்தனம்
2.கஞ்சத்தனம்

அ:அபூ ஸயீதில் குத்ரிய்யீ
ஆ:திர்மிதி

அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளை இட்ட 10 விஷயங்கள்.
1.மறைவாகவும்,வெளிப்படையாகவும் இறைவனுக்கு அஞ்சுதல்
2.சினத்திலும்,திருப்தியிலும் நீதத்தை கடை பிடித்தல்.
3.ஏழ்மையிலும்,செல்வத்திலும் நடுநிலையாக இருத்தல்
4.உறவை அறுத்துக்கொள்பவருடன் வலிய சென்று உறவாடுதல்
5.யாதும் அளிக்காதவருக்கும் சன்மானம் அளித்தல்
6.அநீதி இழைத்தவரை மன்னித்தல்.
7.மவுனம்(சிந்திப்பதாகவும்)
8.பேச்சு(தியானமாகவும்,
9பார்வை(அறிவு பெறுவதாகவும்)
10.நன்மையைக்கொண்டு ஏவுதல்

அ:அபூ ஹுரைரா
ஆ:ரஜீன்

2 comments:

ஜெய்லானி said...

ஜஸாக்குமுல்லாஹ் க்கைர்

mkr said...

அஸ்லாமு அலைக்கும்

சகோதரி உங்களின் இரு வலைப்பக்கத்தை கண்டேன்.மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.தொடர்ந்து உன்களின் பங்களிப்பை கொடுங்கள்.பாரட்டுகள் சகோதரி