
நண்பரை ஏறிட்டுப்பார்த்தார்.எதற்காக கலீஃபா தம்மை ஏறிடுகின்றார் என்பதைனை உணர்ந்து கொண்ட நண்பர் இவ்விதம் கூறினார்.
"அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இப்படி சிதறி விழும் உணவுகளை எடுத்து அருந்துபவர்களுக்கு உணவின் பெருக்கம் - பரக்கத் எப்பொழுதும் இருக்கும்"என்று பகன்றதை கலீஃபாவுக்கு எடுத்துச்சொன்னார்கள்.
அதனை கேட்ட கலீஃபா "இது எனக்குத்தெரியாதே.இதனை நீங்கள் நான் அறியத்தந்தமைக்காக என் அன்புப்பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள்"என்று ஒர் உயரிய மணி மாலையை பரிசளித்தார்.
அதனைப்பெற்ருக்கொண்ட நண்பர்"பார்த்தீர்களா?இப்பொழுதுதான் சிதறிவிழுந்த உணவுப்பொருளை எடுத்து அருந்தினேன்.உடனே எனக்கு பரக்கத் கிடைத்து விட்டது"என்றார்.
அல்லாஹ்வின் ரசூலின் வாக்கு எத்தனை சத்தியமானது என்பதனை உணர்ந்த நண்பர்கள் இருவரும் சிலாகித்து மகிழ்ந்தனர்.
2 comments:
nice
ஜஸாக்கல்லாஹ் க்கைர்
Post a Comment