Showing posts with label முஹம்மது(ஸல்). Show all posts
Showing posts with label முஹம்மது(ஸல்). Show all posts

Tuesday, September 21, 2010

இஸ்லாம்,இறைதூதர் பற்றி அறிஞர்கள்:




இறைவன் ஒருவன் தான் என்பதனை எள்ளளவும் குழப்பமின்றி உறுதியாக ஊர்ஜிதப்படுத்தியது இஸ்லாத்தின் முதற்பணி.மக்களிடையே சகோதரத்துவத்தை வாழ்க்கையில் நடத்திக்காட்டியது இஸ்லாத்தின் இரண்டாவது பணி.
-மகாத்மா காந்தி

தத்துவக்காட்டில் சிக்கித்தடுமாறிக்கொண்டிருக்கும் உலகுக்கு தக்கதோர் வழிகாட்டும் ஒளி விளக்காக நாங்கள் இஸ்லாத்தை கருதுகின்றோம்.
-அறிஞர் அண்ணா

ஒளிவிடும் வைரத்திற்கு ஒப்பாகவே நாயகம்(சல்)அவர்களின் கருத்துரைகள் உள்ளன.வைரத்தை உயர்ந்த அணிகலணாகவும் பவிக்கலாம்.அதை விற்று குதிரை பந்தயத்திற்கும் போகலாம்.அதை தவறாக பயன் படுத்தி அழிவையும் தேடலாம்.அது போலவே மார்க்கத்தைப்பயன் படுத்துவதைப்பொறுத்தே அதன் மாண்பு இருக்கின்றது.
-அறிஞர் அண்ணா.

இஸ்லாத்திற்கு நன்மை அன்பு என்ற ஆயுதத்தினாலேயே கிடைக்க முடியுமே தவிர கொடுங்கோன்மை என்னும் வாளினால் அல்ல.
-பாபர்

எல்லா தீர்க்கதரிசிகளையும்,மதத்தலைவர்களையும் விட மகத்தான வெற்றி பெற்ற மனிதர் முஹம்மத்(ஸல்)
-என்ஸைக்ளோபீடியா பிரிட்டாணிகா

முஹம்மத் தன் சொந்த வாழ்வில் சுமூக தன்மையும்,விசுவாசமும்,குடுமப்த்தின் பால் பரிவும்,மன்னிக்கும் குணமும் உடையவராக இருந்தார்.அவர் அதிகாரத்தின் உச்ச நிலையில் இருக்கும் போது கூட மிக எளிய வாழ்வை மேற்கொண்டார்.
-சேம்பர்ஸ் என்ஸைக்ளோபீடியா

ஒரு மனிதரின் வார்த்தைக்கு மக்கள் அளிக்கும் மதிப்பில்த்தான் அவருடைய பெருமை எல்லாம் அடங்கி இருப்பதென்றால் இந்த வகையில் உலகில் தோன்றிய மனிதருள் முஹம்மத்(ஸல்) மிக உயர்ந்தவர்.
-லண்டன் 'டெய்லி எக்ஸ்பிரஸ்'

Saturday, August 21, 2010

ஏழைகளின் அறம்




"நாயகமே!செல்வந்தர்கள் நன்மைகளை எல்லாம் அபகரித்துக்கொண்டு சென்றுவிடுகின்றார்கள்..நாங்கள் தொழுவது போல் அவர்களும் தொழுகின்றனர்.நாங்கள் நோன்பு நோற்பது போல் அவர்களும் நோன்பு நோற்று விடுகின்றனர்.ஆனால் தங்களிடன் உள்ள செல்வத்தை எழைகளுக்கு வாரி வழங்கி நன்மைகளை எல்லாம் பெற்று விடுகின்றனர்.எங்களால் அறம் செய்ய முடிய வில்லையே"என்று சில வறிய முஹாஜிரீன்கள் ஏக்கத்துடன் கேட்டனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அறம் செய்யக்கூடிய தகுதியை நிச்சயமாக அளித்துள்ளான்.நிச்சயமாக சுப்ஹானல்லாஹ் என்ற ஒவ்வொரு தஸ்பீஹும் அல்ஹம்துலில்லாஹ் என்ற ஒவ்வொரு தஹ்மீதும்,அல்லாஹு அக்பர் என்ற ஒவ்வொரு தக்பீரும் அறத்தை சார்ந்தவையே ஆகும்.இன்னும் நற் செயல் புரியுமாறு பிறரை பணிப்பதும் அறம்தான்.தீயசெயல் புரியாது விலக்குவதும் அறம்தான்"என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:அபூதர் (ரலி)
ஆதாரம்:முஸ்லிம்


Add Video

Wednesday, July 28, 2010

பெருமானார்(ஸல்)அவர்களின் பரவசம்.




பெருமானார்(ஸல்)அவர்கள் ஸஹாபாக்களில் ஒரு பிரிவினரை போருக்காக தேர்ந்தெடுத்து ,அவர்களில் ஒவ்வொருவருக்கும் தேவையான உணவுப்பொருட்களையும் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவ்வீரர்களில் ஒருவரான ஹுதைபா(ரலி)அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்க விடுபட்டுப்போய் விட்டது.படை புறப்பட்டுப்போய் விட்டது.

ஹஜ்ரத் ஜிப்ரீல்(அலை) அவர்கள் பெருமானார்(ஸல்)அவர்கள் முன் தோன்றி "நபியே!திண்ணமாக என் ஹக்கன் என்னை தங்களிடம் அனுப்பி உள்ளான்.உங்களது தோழரகள் அனைவருக்கும் உணவுப்பொருட்கள் கொடுத்தனுப்பிய தாங்கள் ஹுதைருக்கு மட்டும் கொடுக்க மறந்து விட்டீர்கள்.அவர் "ஆகாரங்களில் சிறந்தது யாரப்பி"என்று சொல்லிய வண்ணம் சென்று கொண்டிருக்கின்றார்.மறுமை நாளில் ஹுதைரின் இம்மொழி விண்ணுக்கும் ,மண்ணுக்கும் இடையே பேரொளியாக விளங்கப்போகின்றது.யாரிடமேனும் ஹுதைருக்கு உணவுப்பொருட்களைக்கொடுத்தனுப்பும்படி அல்லாஹ் கூறினான்"என்றனர்.

பெருமானார்(ஸல்)அவர்கள் ஒரு தோழரை அழைத்து ஹுதைருக்கு தேவையான உணவைக்கொடுத்து"ஹுதைரைக்கண்டு இவ்வுணவைக்கொடுத்ததும் ,ரசூலுல்லாஹ் தங்களுக்கு ஸலாம் சொன்னார்கள்.மேலும் உங்களுக்கு உணவுப்பொருளைத்தர மறந்து விட்டார்கள்..திண்ணமாக என் இறைவன் என்னிடம் உங்களைப்பற்றி நினைவூட்ட ஜிப்ரீல்(அலை)அவர்களை அனுப்பி வைத்தான்.அவர் உங்களைப்பற்றி நினைவூட்டியதுடன்,உங்கள் இருப்பிடத்தையும் அறிவித்தார் என்று நான் கூறியதாக கூறுங்கள்"என்று சொல்லி தோழரை ஹுதைரின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

ஹுதைர் சென்ற பாதை நோக்கி விரைந்த அந்தத்தோழர் ஹுதைரை நெருங்கி மேற்கூறியவாறு உரைத்தனர்.இதனைக்கேட்ட ஹுதைர் அல்லாஹ்வைப்புகழ்ந்து,பெருமானார்(ஸல்)அவர்கள் மீது சலவாத்து சொல்லி அகம் மகிழ்ந்தார்.

"அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.ஏழு வானங்களுக்கு அப்பாலிருக்கும் அர்ஷுக்கு மேலிருந்தவாறு என்னை என் ஹக்கன் நினைவு கூர்ந்துள்ளான்.என் பசியையும்,சோர்வையும் கண்டு மனமிறங்கிஉள்ளான்.யாரப்பே!ஹுதைரை நீ மறக்காதது போன்று ஹுதைரையும் உன்னை என்றென்றும் மறக்காமல் இருக்கும் இருக்கும்படி செய்வாயாக!"என்று ஹுதைர் இரு கையேந்தி துஆ கேட்டனர்.

இவ்விபரத்தை அத்தோழர் பெருமானார்(ஸல்)அவர்களிடம் சொன்னதும்,பெருமானார் அவர்கள்"ஹுதைர் அவ்வாறு கூறிய தருணத்தில் மட்டும் நீர் வானத்தை பார்த்திருப்பீராயின் அவரது இச்சொல்லுக்காக பூமிக்கும் வானத்திற்கும் இடையே ஒரு பேரொளியைக்கண்டிருப்பீர்"என்று பரவசத்துடன் கூறினார்கள்.

ஆதாரம்:அல் கஸ்ஸுல் இஸ்லாமி
அறிவிப்பாளர்:அப்துல்லாஹ் பின் உமர்

Sunday, July 4, 2010

நிறைந்திடும் நெஞ்சம்





நபிகள் நாயகம் அவதரித்தார்
இந்த அகிலம் முழுதும் ஆதரித்தார்

வேண்டிய வாழ்வு நமக்களிக்க
ஏகன் இறையை வேண்டிடுவார்

துன்பங்கள் நீங்கி சுகம் அளிக்க
துயரங்கள் இல்லா வாழ்வாங்க

நிம்மதியான நெஞ்சம் பெற
தூய இறையிடம் பரிந்துரைப்பார்

இறைவனை என்றும் நினைவு கொள்வோம்
இறைத்தூதரின் சொற்படி வழி நடப்போம்

இறைவனைத்தொழுதே துதித்திடுவோம்
இறை அச்சமுடன் நாம் வாழ்ந்திடுவோம்

எரியும் பகையினை அணைத்திடவே
அவன் பால் உலகை உயர்த்திடவே

தகிக்கும் பொறாமை தணிந்திடவே
வெறுக்கும் அவாவை ஒழித்திடவே

மனதினில் நாமே உறுதிகொள்வோம்
தொண்டால் நாமும் நிலைத்திடுவோம்

கற்றதன் பலனை கண்டிடுவோம்
இறைநபி வழியில் சென்றிடுவோம்

அத்தனை நலமும் நாம் பெறுவோம்
நம் நெஞ்சங்கள் நிறைந்திடும் இறை நினைவில்

Friday, July 2, 2010

ஏன் படைத்தாய் இறைவா!

மானுட ஜாதியை ஏன் படைத்தாய்
மனதினில் பொறாமையை ஏன் விதைத்தாய்

நெறியாய் வாழவும் தெரியவில்லை
நபி நேர் வழி காணவும் புரியவில்லை

தம்மின மனுஷ இதயங்களின்
உணர்வுகள் ஒன்றும் புரிவதில்லை

மனதினில் தோன்றிய கசடுகள்
எண்ணத்தில் உதித்த வக்கிரங்கள்
அத்தனையும் போட்டுடைத்து
நல்லிதயங்களை கொலை செய்யும்
கல்லிதயங்கள் ஏன் படைத்தாய்

தாந்தோன்றித்தனமாக நெறியின்றி
வாயில் வந்ததெல்லாம் பேசி
வார்த்தைகளால் விளையாடி
வஞ்சிக்கும் அவலம் இந்த
புவியார்க்கு இல்லாமல்
காத்தருள் காத்தருள் என்னிறைவா

அமைதியாய் வாழ்வதும் பிடிக்கவில்லை
எதிர்ப்பைக்காட்டவும் பிடிக்கவில்லை
இரண்டுக்கும் நடுவாய் வாழ்வதென்றால்
யாரும் துரும்பாய்.எறும்பாய் பிறக்கவில்லை.

இறுதி நபியை அனுப்பிவைத்தாய்
இகத்தை ஒளிவழி சேர்த்து வைத்தாய்
இன்னும் மனிதன் திருந்தவில்லை
மன இருளை விலக்கிட முனையவில்லை.

படித்ததில் பதிந்தவை

Friday, June 11, 2010

(10)நாயகத்தின் சவுந்தர்ய முத்திரை


கவிஞர் மூஸா பெருமானார் (ஸல்)அவர்களின் அழகுத்திருவுருவின் சவுந்தர்ய அங்க
வடிவினை அழகுற வர்ணித்து பாடிய நாயகத்தின் சவுந்தர்ய முத்திரை.

அந்தர மாமணச் சந்தன
வண்ணத்து மேனியர்
நீல ஆகாய மீதவர்
அம்புலி போல் முக ஜோதியார்

மந்தரம் நீந்திடு மால் மழை
போல் முடி சூடினார்
உச்சி வார்தருங் கோடதோ
வானத்து மின்னெனக்கூடினார்.

கங்கை வளர்ந்திருப் பங்கம்
மென்னும் விழியினார்
அடர் கானகக் குங்குமக்
கோவை பழுத்த இதழினார்.

சங்கெனத் தூங்கிய பூவிருஞ்
செம்மடற் காதினார்
வான் தாங்கிய கைப்பிடி
போல் நெடு நாசியின் வாசியார்

ரெத்தின வெள்ளைக் கிளற
அரும்பும் எயிற்றினார்
தங்க ரேகைக்கலச
கடைசலோ என்னும் மிடற்றினார்.

அத்தில் கிடக்கும்சமுத்திரம்
போல் வடி மார்பினார்
புடை ஆரமே போலெழு
வல்லமா நல்ல புயத்தினார்

பட்டுப்பொதிந்த செவ்வாம்பல்
மலர்ந்ததன் கையினார்
நல்ல பவளம் பதிந்த நுண்
தோடென மின்னும் நகத்தினார்

இந்த மேனி உய்யப்
பிறந்த முஹம்மதாம் தூதினார்.


நாயகம் (ஸல்)அவர்களை மற்ற நபிமார்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது ஆதம் (அலை)அவர்களை அதிகம் ஒத்திருப்பதாக சரித்திரங்கள் கூறுகின்றது.

ஒழுக்கதில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களைப் போலவும்

உடற்கட்டில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களைப் போலவும்)

அறிவில் நபி ஷீது (அலை) அவர்களைப் போலவும்)

சாதுர்யத்தில் நபி நூஹு(அலை) அவர்களைப் போலவும்

நாவன்மையில் நபி ஸாலிஹ்(அலை) அவர்களைப் போலவும்

அழகில் நபி யூஸுஃப்(அலை) அவர்களைப் போலவும்

சந்தத்தில் நபி தாவூத் (அலை) அவர்களைப் போலவும்

அன்பில் நபி தானியல் (அலை) அவர்களைப் போலவும்

துப்புரவில் நபி யஹ்யா (அலை) அவர்களைப் போலவும்

தக்வாவில் நபி ஈஸா (அலை) அவர்களைப் போலவும்
அறியப்பட்டார்கள்.

ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்

Friday, June 4, 2010

(6) மாநபி(ஸல்)அவர்களின் முன்னோரும்,பின்னோரும்.


1.அதானான்
2.முஃது
3.நஸா
4.முளர்ரு
5.இல்யாஸ்
6.முத்ரிகா
7.குஸைமா
8.சனானா
9.நள்ரு
10.மாலிக்
11.பிஹ்ரு(குரைஷி வம்சம் இவரில் இருந்து ஆரம்பம் என சரித்திரங்கள் கூறுகின்றது)
12.காலிப்
13.லுவையூ
14.கஃபு
15.முர்ரா
16.கிலாப்
16.குஸையு
17.அப்துல் முனாஃப்
18.ஹாஷிம்
19.அப்துல் முத்தலிப்
20.அப்துல்லாஹ்
21.முஹம்மத் நபி(ஸல்)
22.பாத்திமா
23.ஹுசைன்
24.ஆபிதீன்
25.முஹம்மது பாக்கிர்
26.ஜஃபர் ஸாதிக்
27.முஹம்மத்
28.செய்து ஜலாலுதீன்
29.செய்யிது அபு முஹம்மது கமால்
30.செய்யிது தாவூத்
31.செய்யிது ஜமாலுல் கரீம்
32.செய்யிது அபு ஹுஸைன்
33.செய்யிது இஸ்மாயிலுல் கரீம்
34.செய்யிது முஹம்மது நசீர்
35.செய்யிது அபு யூஸுஃப்
36.செய்யிது அப்துல் கபூர்
37.செய்யிது அஹ்மது வலியுல்லாஹ்
38.செய்யிதுனா சுல்தான் செய்யது இப்ராஹீம்

ஆதாரம்:இமாம் புஹாரி(ரஹ்)நபித்துவம் பற்றிய தலைப்பில் பெருமானார் (ஸல்) அவர்களின் தலைமுறைகளைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.