Showing posts with label முத்தான பத்து. Show all posts
Showing posts with label முத்தான பத்து. Show all posts

Friday, October 1, 2010

விருப்பம்

1.விழுங்க விரும்பினால் கோபத்தையும்,துக்கத்தையும் விழுங்கி விடுங்கள்.

2.உடுக்க விரும்பினால் உயர்வையும்,உண்மையையும் உடுத்திக்கொள்ளுங்கள்.

3.அறிய விரும்பினால் நன்மைகளையும் தீமைகளையும் அறிந்து கொள்ளுங்கள்.

4.கொடுக்க விரும்பினால் பிறருக்கு நலவைத்தருவதையும்,பயனளிக்கத்தக்கவற்றையும் கொடுங்கள்.

5.வாங்க விரும்பினால் ஏழை,அனாதைகளின் ஆசிகளை வாங்குங்கள்.

6.பேச விரும்பினால் இன்சொற்களையும்,நன் சொற்களையும் பேசுங்கள்.

7.அடிக்க விரும்பினால் மன இச்சைகளையும்,துவேஷங்களையும் அடித்து வீழ்த்துங்கள்.

8.களைய விரும்பினால் துர்பழக்கத்தையும்,முன்கோபத்தையும் களைந்துவிடுங்கள்.

9.உண்ண விரும்பினால் ஹலானவற்றியும்,தூயவனவற்றையும் உண்ணுங்கள்.

10.தர்கிக்க விரும்பினால் கண்ணியமானவர்களிடமும்,உயர்வானவர்களிடமும் தர்கியுங்கள்

Tuesday, July 6, 2010

அஷ்ரத்துல் முபஷ்ஷரா

அஷ்ரத்துல் முபஷ்ஷரா - சுவன நற்பேறு பெற்ற உத்தமர்கள் பத்துபேர்.அவர்கள்,

1.ஹஸ்ரத். அபூபக்கர்

2.ஹஸ்ரத். உமர்

3.ஹஸ்ரத். உதுமான்

4.ஹஸ்ரத். அலி

5.ஹஸ்ரத். தல்ஹா

6.ஹஸ்ரத். ஜுபைர்

7.ஹஸ்ரத். ஸைஈதிபுனு ஜுபைர்

8.ஹஸ்ரத். அத் பின் அபிவக்காஸ்

9.ஹஸ்ரத். அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்

10.ஹஸ்ரத். அபூ உபைதாபின் ஜர்ராஹ் - ரலியல்லாஹு அன்ஹுன்ன


வாழ்க்கை

1. வாழ்க்கை என்பது ஒரு குறிகோள்:அதை அடைய வேண்டும்.

2. வாழ்க்கை என்பது ஒரு வாக்கு:அதை நிறைவாக்க வேண்டும்.

3. வாழ்க்கை என்பது ஒரு பயணம்:அதை முடிக்க வேண்டும்.

4. வாழ்க்கை என்பது ஒரு கடமை:அதை நிறை வேற்ற வேண்டும்.

5. வாழ்க்கை என்பது ஒரு சவால்:அதை சந்திக்க வேண்டும்.

6. வாழ்க்கை என்பது ஒரு பாடல்:அதைப் பாட வேண்டும்.

7. வாழ்க்கை என்பது ஒரு கனவு:அதை நனவாக்க வேண்டும்.

8. வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு:அதை ரசிக்க வேண்டும்.

9. வாழ்க்கை என்பது ஒரு நீர் நிலை.அதை நீந்திச் செல்ல வேண்டும்.

10. வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம்:துணிவு,பொறுமை,தளராமனம் என்ற மூன்று கருவிகளுடன் போராட வேண்டும்.

Monday, June 28, 2010

(19) நெஞ்சத்தில் மரித்துவிட்ட பத்துவித செயல்கள்:





ஹஜ்ரத் இப்றாஹீம் பின் அத்ஹம் (ரஹ்)அவர்களிடம் ஒரு குழுவினர் வந்து

"பெரியார் அவர்களே!அல்லாஹ் எல்லாவிஷயத்திற்கும் என்னிடமே பிரார்த்தனை செய்யுங்கள்.நான் நிறைவேற்றுவேன் என்று திரு குர் ஆனில் கூறி இருக்கின்றான்.அதற்கேற்ப நாங்கள் எமது கஷ்டங்களைப்போக்க மன்னிப்புக்கோரி காலையிலும்,மாலையிலும்,இரவினிலும் இறைவனிடன் துஆ கேட்ட வண்ணம் இருக்கின்றோம்.ஆனால் ஹக்கன் எங்கள் து ஆவை கபூல் ஆக்கவில்லையே.என்ன காரணம்?"என்று கேட்டனர்.

அதற்கு அத்ஹம் அவர்கள் "உங்கள் கல்பில்(நெஞ்சங்களில்)இருக்கும் ஈமான்(நன்நம்பிகை)பத்து வித காரணக்களால் மரித்துப்போய் விட்டது.உங்களது ஈமான் ஒளி மங்கி இருள் அடைந்து போய் விட்டது.அத்தகைய இருள் நெஞ்சத்தின் பிரார்த்தனைகள் இறைவன் சமூகம் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை"என பதில் அளித்தார்கள்.

கல்பில் மரித்துப்போன அந்த பத்துவித காரியங்கள்:

1.இறைவன் ஒருவன் தான் என்று நன் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்.ஆனால் இறைவனின் ஆணைகளை நிறைவேற்ற மறந்து விடுகின்றீர்கள்.

2.அல்லாஹ்வின் அருளைப்பெற அல் குர் ஆனை தினமும் ஓதி வருகின்றீர்கள்.ஆனால் அதில் உள்ள போதனைப்படி நடக்காமல் இருக்கின்றீர்கள்.

3.ஷைத்தான் (இப்லீஸ்)உங்கள் பகைவன் என்கின்றீர்கள்.ஆனால் அவனை பின் பற்றி நடந்து விடுகின்றீர்கள்.

4.நபிகள் (ஸல்) அவர்களை ஆழமாக நேசிப்பதாக வாதிக்கின்றீர்கள்.ஆனால் அவர்கள் சொன்ன நல்வழியை செயல் படுத்த மறுக்கின்றீர்கள்.

5.சொர்க்கத்தை அடைய ஆசிக்கின்றீர்கள்.ஆனால் அதனை அடைவதற்கு செய்ய வேண்டிய நற்கிரியைகளை செய்ய மறுக்கின்றீர்கள்.

6.நரகத்திற்கு அஞ்சுவதாக பகருகின்றீர்கள்.ஆனால் பாவச்செயல்கள் செய்வதை விட்டும் விலகாமல் இருக்கின்றீர்கள்.

7.பிறரின் குற்றங்களைத்தேடித்திரிகின்றீர்கள்.ஆனால் உங்களிடையே பின்னிக்கிடக்கும் குற்றங்களை சிந்தித்து உணரத்தவறிவிட்டீர்கள்.

8.மரணத்தை நம்புகின்றீர்கள்.ஆனால் அதற்கு முன் நற்செயல்களை செயல்கள் புரியத்தயங்குகின்றீர்கள்.

9.அல்லாஹ்வினால் அளிக்கப்படும் ஆகாரங்களை உண்கின்றீர்கள்.ஆனால் அதற்காக அவனுக்கு நன்றி செலுத்த தவறி விடுகின்றீர்கள்.

10.மரணம் அடைந்தவர்களை நல் அடக்கம்செய்கின்றீர்கள்.ஆனால் நீங்களும் இதுபோல் அடக்கப்படுவோம் என்ற பய உணர்வு கொள்ளத்தவறிவிட்டீர்கள்.

இவ்வாறு இப்றாஹீம் பின் அத்ஹம் (ரஹ்)அவர்கள் மறு மொழி பகர்ந்தார்கள்.இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ஹக்கனையும்,அவனது ரசூலையும் ஈமான் கொண்டிருந்தால் மட்டும் போதாது.அவர்களின் போதனைப்படி நடக்கவேண்டும்.அப்பொழுதுதான் இறைவனின் அருளும் அன்பும் நமக்கு கிட்டும்.நம் நியாயமான பிராத்தனைகளுக்கு இறைவன் செவிசாய்ப்பான்.நாம் கேட்கும் துஆக்களை இறைவன் அங்கீகரிப்பான்.துஆவிலும்,அல்லாஹ்வின் பால் உள்ள அச்சத்திலும், வணக்கத்திலும்,ஏனைய நற்கிரியைகளிலும் ஓர்மை அவசியம் என்பதினை நாம் மறக்கக்கூடாது.

படித்ததில் பதிந்தவை

(18) பத்து வித குணங்கள்.

பத்துவிதமான மக்களிடம் பத்துவித குணங்களிருப்பதை இறைவன் வெறுக்கின்றான்:


1.செல்வர்களிடத்தில் - கஞ்சத்தனம்.

2.வலியோர்களிடத்தில் - பெருமைத்தனம்

3.அறிஞர்களிடத்தில் - பேராசை.

4.பெண்களிடத்தில் - நாணமின்மை.


5.முதியோர்களிடத்தில் - உலகப்பற்று

6.இளைஞர்களிடத்தில் - சோம்பல்


7.ஆட்சியாளர்களிடத்தில் - அநீதி


8.போர்வீரர்களிடத்தில் - கோழைத்தனம்.


9.துறவிகளிடத்தில் - தற்பெருமை

10.வணக்கஸ்தலங்களில் - புகழாசை.