Wednesday, December 15, 2010

துஆ


எத்தனையோ திக்கற்றவர்கள் வானத்தின் பால் கையேந்தி “யா ரப்பு! யா ரப்பு!”என்று துஆ கேட்கின்றனர்.ஆனால் அவர்களின் உணவு,உடை,இருப்பு,அனைத்தும் ஹராம்.இந்நிலையில் கேட்கும் துஆ இறைவனால் அங்கீகரிக்கப்படாது என்பது மாநபியின் நல்வாக்காகும்.

”கூபா”நகரிலே மகான்களின் கூட்டம் ஒன்று இருந்தது.அவர்கள் துஆ கேட்டால் உடனே அங்கீகரிக்கப்பட்டுவிடும்.அந்நகரத்தில் அநீதி செய்யப்படும் அதிகாரி நியமிக்கப்பட்டால் உடனே இவர்கள் துஆ செய்வார்கள்.அத்துடன் அந்த அதிகாரியின் ஆக்ரமிப்பு அழிந்து போகும்.மழை வேண்டிக்கேட்டால் உடன் மழை பொழியும்,இவ்வாறாக கூபா நகரில் அந்த மகான் கூட்டம் மக்களுக்காக பிரார்த்தனை செய்து வந்தது.

கொடியோன் ஹஜ்ஜாஜ் அதிகாரியாக நியமிக்கப்பட்டதும்,அவன் ஒரு சூழ்ச்சி செய்தான்.அந்த மகான்கள் அனைவருக்கும் விருந்து அளித்தான்.அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் நான் இந்த மகான்களின் சாபக்கேட்டில்; இருந்து தப்பித்து விட்டேன்.”என்று ஹஜ்ஜாஜ் கூறினான்.காரணம் என்னவென்று விசாரித்ததில் “மகான்களின் வயிற்றில் ஹராமான உணவு சென்று விட்டது”என்று கூறினான்.

ஹராமான உணவு மகான்களின் வயிற்றினுள் சென்று விட்டபடியால் அவர்கள் கேட்கும் துஆ இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று ஹஜ்ஜாஜ் கொக்கரித்த்து அவனது மதியீனம் இன்றி வேறென்ன?

Saturday, November 27, 2010

அரபிப் பதத்தின் விளக்கம் - 3


23.மகாமு மஹ்மூத் - புகழப்படும் அந்தஸ்த்து என்று பொருள்.மறுமையில் நீதி விசாரணைக்கு முன்பு மக்கள் வேதனையால் துன்புறும் பொழுது அதிலிருந்து அவர்களைக்காப்பாற்றும் பொருட்டு அல்லாஹ்வின் பரிந்துரை செய்யும் மிகப்பெரிய அந்தஸ்த்தை நபி (ஸல்)அவர்களுக்கே மட்டும் அல்லாஹ் வழங்குவான்.

24.மிஸ்ர் - இதன் சொற்பொருள் பட்டணம் என்பதாகும்.இஸ்லாமிய வழக்கில் இறைத்தூதர் மூஸா (அலை )அவர்கள் பிறந்த எகிப்து நாட்டினை குறிக்கும்.

25.முஸ்தலிஃபா - மக்காவிலுள்ள மினாவுக்கும் அரபாத்துக்கும் இடையில் உள்ள ஓர் இடமாகும்.ஹாஜிகள் அரஃபாவில் இருந்து வந்து முஸ்தலிஃபாவில் ஓர் இரவு தங்குவது ஹஜ்ஜின் கடமைகளுள் ஒன்றாகும்.

26.முஹர்ரம் - இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும்.

27.முஹாஜிர் - இதன் பொருள் இறைப் பொருத்தத்திற்காக இடம் பெயர்வோர் என்பதாகும்.அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் மக்காவில் இருந்து மதீனாவுக்கு கிளம்பியவர்கள் முஹாஜிரீன்கள் எனப்படுவர்.ஓரிறையை நிராகரிக்கும் ஆட்சியிலிருந்து தம்முடைய இறை நம்பிக்கையை காத்துக்கொள்ளவும்,இறைவன் தடுத்துள்ளதை விட்டும் தன் ஆத்மாவை காத்துகொள்ளவும் இடம் பெயர்பவர்களை முஹாஜிரீன்கள் எனக்கருதப்படுவர்.இறை மார்க்கத்தை பின்பற்றிட தடைகள் ஏற்படும் பொழுது தம் தாய் நாட்டை துறந்து வேற்றிடம் செல்பவர் என்றும் பொருள் கொள்ளலாம்.

28.யஸ்ரிப் - பெருமானார் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்துக்கு முன்பு மதீனாவின் பெயர் யஸ்ரிப் ஆகும்.எனவே இது மதீனாவின் பழைய பெயர் என்றும் கொள்ளலாம்.

29.ரமளான் - இஸ்லாமிய மாதங்களின் வரிசையில் இது ஒன்பதாவது மாதமாகும்.இம்மாதத்தில்தான் ஐம்பெரும் கடமைகளில் நான்காவது கடமையான நோன்பு நோற்கப்படுகின்றது.குர் ஆனில் குறிப்பிடப்படும் ஒரே மாதத்தின் பெயரும் இதுதான்.குர் ஆன் முதன் முதலாக பூமியில் இறங்கிய இரவும் இந்த மாதத்தில்த்தான் உள்ளது.

30.ரலி - ரலி என்பது ரலியல்லாஹு அன்ஹு என்றும் கருதலாம்.
இதன் பொருள் அல்லாஹ் அவரைப்பொருதிக்கொள்வானாக! என்பதாகும்.இது நபித் தோழர்களின் பெயருக்குப்பின்னால் சொல்லப்படுபவை.

31.ரஹ் - இது ரஹ்மதுல்லாஹி அலைஹி என்பதின் சுருக்கமாகும்.இதன் பொருள் அல்லாஹ்வின் அருள் அவர் மீது உண்டாவதாக என்பதாகும்.இது நபித்தோழர்களுக்கு பிறகு வந்த நல்லடியார்களின் பெயர்கள் சொல்லப்படும் பொழுது உபயோகப்படுத்தப்படும்.

32.வஹீ - அறிபவரையும்,அறிவிக்கப்படுபவரையும் தவிர மற்றவர் அறிய முடியாத வண்ணம் விரைவாக செய்தி அறிவிப்பது,இதயத்தில் உதிப்பைத்தோற்றுவிப்பது என்பது பொருளாகும்.இஸ்லாமிய மொழி மரபில் வஹீ என்பது இறைவன் மனிதர்களில் இருந்து யாரை நபியாக தேர்வு செய்கின்றானோ அவருக்கு தன்னுடைய செய்திகளை அறிவிப்பதாகும்.வானவர் மூலம் இறைத்தூதர்களுக்கு இறைவனால் அனுப்பப்படும் இறைச்செய்தி.

33.ஸல் - ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்ற பிரார்த்தனையின் சுருக்கமே இது இறைவனின் கருணையும் அமைதியும் உண்டாவதாக!என்பதே இதன் பொருள்.நாயகம் ஸல் அவர்களின் பெயர் உச்சரிக்கபடும் குறிப்பிடப்படும் போதெல்லாம் இதனை சொல்வது முஸ்லிம்களின் கடமையாகும்.இதனை சலவாத் என்பர்,

34.ஸலாம் - இது அஸ்ஸலாமு அலைக்கும் என்பதை குறிப்பதாகும்.இதன் பொருள் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக என்பதாகும்.இது உலக முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் அளித்துக்கொள்ளும் முகமனும் வாழ்த்தும் ஆகும்.

35.ஸுன்னத் - இதன் பொருள் வழி முறை என்பதாகும்.அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பழக்க வழக்கங்கள் நடைமுறைகள்,மேலும் அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகள் ஆகியவையே ஸுன்னத் ஆகும்.

36ஸுஜூது - இது தலையை தரையில் வைத்துப்பணிதல் என்பதனினைக்குறிக்கும்.இது இறைவனுக்காக மட்டுமே செய்யபட வேண்டுமே அன்றி வேறு எதற்கும் எவருக்கும் செய்யக்கூடாது என்று இஸ்லாம் பணிகின்றது.

37.ஜிப்ரீல்(அலை) - இறைவனுக்கு நெருக்கமான நாண்கு வானவர்களுள் இவரும் ஒருவர்.வானவர்களின் தலைவரும் இவரே.இவர்கள்தான் இறைத்தூதர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) கொண்டு வந்த வானவர்.



Saturday, November 20, 2010

இறைத்தூதர்கள்(சிறு குறிப்பு) - 2

13.ஸுஐபு(அலை): இவர்கள் நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் வழித்தொன்றல்.வடமேற்கு சவூதியாவில் உள்ள மலைபிரதேசமான "மத்யன்"பகுதிக்கும்"அய்கா"என்னும் மற்றுமொரு பகுதிக்கும் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.ஓரிறைக் கொள்கையையும்,வணிகநேர்மையையும் மக்களுக்கு வலியுறுத்தி பிரச்சாரம் செய்தார்கள்.

14.மூஸா(அலை) இவர்கள் கி.மு 14ஆம் நூற்றாண்டில் எகிப்தில் பிறந்தனர்.கொடுங்கோலன் இரண்டாம் ரம்சேஸ்(பிர் அவ்ன்)கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட இஸ்ராயீல் சமுதாயத்தை மீட்டார்கள்.இவர்களுக்கு அல்லாஹ் "தவ்ராத்" வேதத்தை அருளினான்.

15.ஹாரூன் (அலை):இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களின் சகோதரர்.எகிப்தின் சர்வாதிகாரி இரண்டாம் ரம்சேஸை எதிர்த்துப் போரடுவதில் மூஸா (அலை) அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

16.இல்யாஸ்(அலை): கி மு 8ஆம் நூற்றாண்டு நபி ஹாரூன் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் வந்த ஒரு இறைத்தூதர்.அன்றைய ஷாம் நாட்டு மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.

17.யூனுஸ்(அலை): கி.மு 8ஆம் நூற்றாண்டில் ,இராக்கிலுள்ள "நைனவா" பகுதிக்கு இவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.

18.தாவூத்(அலை): இறைத்தூதர் யஃகூப்(அலை) அவர்களின் வழித்தோன்றல் ஆவார்கள்.இவர்களுக்கு "ஜபூர்" என்னும் வேதத்தை அல்லாஹ் அருளினான்.இவர்கள் பாலஸ்தீன சர்வாதிகாரியான ஜாலூதை வீழ்த்தினார்கள்.

19.சுலைமான்(அலை): இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களின் மைந்தரான இவர்கள் இறைத்தூதராகவும்,பேரரசராகவும்,விளங்கினார்கள்.ஜெரூசலத்திலுள்ள புனித இறை இல்லமான பைத்துல் முகத்தஸை இறைக்கட்டளைக்கு இணங்க புதுப்பித்தார்கள்.ஜின் இனமும்,பறவை இனமும் இவர்களுக்கு வசப்படுத்திக்கொடுக்கப்பட்டிருந்தன.

20.ஜகரிய்யா(அலை): கி.மு முதலாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் இஸ்ரவேலர்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.இறைத்தூதர் தாவூத்(அலை) அவர்களின் வழித்தோன்றலான இவர்கள் அன்னை மர்யமை வளர்த்தார்கள்.இறைத்தூதர் யஹ்யா(அலை) அவர்கள் இவர்களின் புதல்வர் ஆவார்கள்.

21.யஹ்யா(அலை): கி.மு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்கள் ஜக்கரிய்யா(அலை) அவர்களின் புதல்வர்.இவரை இஸ்ரவேலர்கள் படுகொலை செய்தனர்.

22.ஈஸா(அலை): இவர் கி.மு 4ஆம் ஆண்டில் பாலஸ்தீனத்தில் உள்ள நாஸிரா என்னும் ஊரில் மர்யம்(அலை) அவர்களுக்கு ஆண் துணையின்றி அற்புதமான முறையில் பிறந்தார்கள்.இவருக்கு இஞ்ஜீல் வேதம் இறைவனால் அருளப்பட்டது.

23.துல்கிஃப்லு(அலை):இறைத்தூதர்.

24.அல்யஸவு(அலை): இறைத்தூதர்.

25.முஹம்மது(ஸல்): இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 12(கி.பி 570 ஆகஸ்ட் 20) திங்கள்கிழமை திருமக்காவில் பிறந்தார்கள்.இப்புவியில் 63ஆண்டு காலங்கள் வாழ்ந்து ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் 12ஆம் நாள் (கி.பி 632 ஜூன் 7)திங்கள் கிழமை இவ்வுலகை விட்டு மறைந்தார்கள்.



Monday, November 8, 2010

இறைத்தூதர்கள்(சிறு குறிப்பு) - 1

குர்ஆனில் குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்கள்(சிறு குறிப்பு)

1.ஆதம் (அலை):உலகில் முதன்முதலாக படைக்கப்பட்ட மனிதர்.இந்த உலகிற்கு இறைவனால் அனுப்பபட்ட முதல் இறைத்தூதர்.

2.இத்ரீஸ்(அலை):இறைத்தூதர் நூஹ்(அலை)அவர்களின் முப்பாட்டனாரான இவர்கள் இறைத்தூதர் ஆதம் - ஹூத் அவர்களுக்குப்பின்னால் வந்த நபியாவார்.

3.நூஹ்(அலை):ஆதித்தந்தை ஆதம் (அலை) அவர்களுக்குப்பின் வந்த இறைத்தூதர்.இவர்கள் 950ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.இவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயம் மிகப்பிரமாண்டமானது.

4.ஹூத்(அலை):கி.மு 2000 இல் வாழ்ந்த அரபு பழங்குடியின மக்களுக்கு இவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.இப்பழங்குடி மக்கள் யமன் நாட்டில் கடலோரப்பகுதிகளில் வசித்து வந்தனர்.

5.ஸாலிஹ் (அலை):இவர்கள் கி.மு 2430 இல் சவுதிய்யாவிலுள்ள அல்ஹிஜ்ர் என்னும் இடத்தில் வாழ்ந்த இறைத்தூதர்.ஆடம்பர வாழ்வில் மூழ்கி,சிலைவணக்கத்தில் மாய்ந்து போய்க்கொண்டிருந்த "ஸமூத்"கூட்டத்தினரை சீர்படுத்த பாடுபட்டார்கள்.

6.இப்றாஹீம்(அலை):இவர்கள் கி.மு 2000 வாக்கில் தென் இராக்கில் உள்ள "உர்"என்னும் ஊரில் பிறந்த இறைத்தூதர் ஆவார்கள்.இவர்களுக்கு "இறை நம்பிக்கையாளர்களின் தந்தை" எனவும்,"இறைவனின் உற்ற நண்பர்" எனவும் சிறப்பு பெயர்கள் உண்டு.இறை ஆணைப்படி கஃபா ஆலயத்தை தன் மகனோடு சேர்ந்து புனர் நிர்மாணம் செய்தார்கள்.

7.லூத் (அலை):நபி இப்றாஹீம்(அலை)அவர்களின் சகோதரர் மகனான இவர்கள் ஜோர்தானில் உள்ள "ஸத்தூம்"என்னும் பகுதிக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.ஓரினசேர்க்கையை எதிர்த்து பிரச்சாரம் செய்தவர்கள்.

8.இஸ்மாயீல்(அலை): கி.மு 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இறைத்தூதரான இவர்கள் நபி இப்றாஹீம் - ஹாஜரா தம்பதிகளுக்கு மூத்த புதல்வராவார்கள்.இவர்களிடம் இருந்து அரபு சந்ததிகள் தோன்றியதால் "அரபிகளின் தந்தை" என்பர்.

9.இஸ்ஹாக்(அலை): இறைத்தூதரான இவர்கள் நபி இப்றாஹீம் - ஹாஜரா தம்பதிகளின் இளைய புதல்வராவார்கள்.இவரின் மைந்தர்தான் யகூஃப் (அலை) அவர்கள்.எனவேதான் இவர்களை "இஸ்ராயீல்களின் தந்தை"என்று சொல்வர்.

10.யஃகூப்(அலை): கி.மு 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்கள் இறைத்தூதர் இஸ்ஹாக்(அலை) அவர்களின் புதல்வர்.இவர்களுக்கு 12 ஆண் பிள்ளைகள் இருந்தனர்.இந்த 12 பேரின் வழித்தோன்றல்களே இஸ்ராயீல் சமூகத்தினர்.யஃகூப் (அலை) அவர்களின் மற்றுமொரு பெயரே இஸ்ராயீல்.இதனால் இஸ்ரவேலர்களை பனீ இஸ்ராயீல் - இஸ்ராயீலின் மக்கள் என்பர்.

11.யூசுப்(அலை): யஃகூப் (அலை) அவர்களின் இளைய புதல்வரான இவர்கள் கி.மு 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் பேரழகுக்கு சொந்தக்காரர்.இவர்கள் எகிப்தின் அமைச்சராகவும்,பின்னர் அரசராகவும் விளங்கினார்கள்.

12.ஐயூப்(அலை): நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் வந்தவர்.நபி யூசுப்(அலை) அவர்களுக்குப்பின் ,தென் பாலஸ்தீனுக்கும் "அல் அகபா"வளைகுடாவுக்கும் மத்தியில் "அத்வம்"பகுதி மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள் என்று சொல்லப்படுகின்றது.இவர்கள் பொறுமைக்கு பெயர் போனவர்கள்.

அரபிப் பதத்தின் விளக்கம் - 2


அரபிப் பதத்தின் விளக்கம் - 2

11.கலிமா - இதன் பொருள் சொல்,வார்த்தை,பேச்சு என்பதாகும்.இஸ்லாத்தின் அடிப்படை தத்துவங்களை கூறும் வசனங்களுக்கு கலிமா என்று கூறப்படுகிறது.'லாயிலாஹா இல்லல்லாஹ் - முஹம்மது ரசூலுல்லாஹ்(வணக்கத்துக்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை-முஹம்மது(ஸல்)அவர்கள் இறைவனின் தூதர்)எனும் இஸ்லாமின் மூலக்கொள்கையை இச்சொல் குறிக்கும்.

12.தயம்மும் - இச்சொல்லுக்கு நாடுதல் என்று பொருள்.உளு செய்வதற்கு நீர் கிடைக்காத பொழுது மண்ணைக்கொண்டு சுத்தி செய்து கொள்ள நாடுவதைக் குறிப்பிட இச்சொல் பயன் படுத்தப்படுகின்றது.'உளு' எனும் அங்கசுத்தி செய்ய நீர் கிடைக்காத சமயத்தில் சுத்தமான மண் உள்ள தரையில் கைகளைப் பதித்து முகம் ,கைகளில் தடவிக்கொள்வது.

13.தவாஃப் - புனித மக்காவில் உள்ள திருகஃபாவை ஏழுதடவை சுற்றி வருவதற்கு தவாஃப் என்று பெயர்.முஸ்லிம்கள் கஃபாவைத் தவிர வேறு எதனையும் சுற்றி வருதல் கூடாது.ஹஜ்ஜிலும்,உம்ராவிலும் இது முக்கிய வழிபாடாகும்.

14.துஆ - இதன் பொருள் இறைஞ்சுதல்,பிரார்தித்தல் என்று பெயர்.அழைப்பு என்பது சொற் பொருளாகும்.

15.நபி - நுபு எனும் மூலச்சொல்லில் இருந்து வந்த இதன் பொருள் உயர்த்தப்பட்டவர் என்பதாகும்.இறைவனிடமிருந்து செய்திகளை 'வஹீ' மூலம் எடுத்துக்கூறும் தூதர்களுக்கு கூறப்படுகின்றது.நபித்துவத்திற்கு 'நுபுவத்'என்று பெயர். எல்லா நபிமார்ளும் இறைவனால் அனுப்பப்பட்டவர்களே. மக்களுக்கு இறை செய்திகளை எடுத்துரைத்து அவர்களுக்கு நேர்வழிக்காட்டுவதற்காக மக்களில் இருந்தே இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களே இறைத்தூதர்.

16.பக்கா - இது புனித மக்காவின் பழைய பெயராகும்.

17.மக்கா - இஸ்லாத்தின் புண்ணிய நகராமான இது சவூதி அரேபியாவில் உள்ள ஹிஜாஸ் மாநிலத்தில் செங்கடலில் இருந்து 70 மைல் தொலைவில் உள்ளது.இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் இறை ஆணைப்படி இங்கு புனித கஃபாவை நிர்மாணித்தார்கள்.இஸ்லாத்தில் இறுதித்தூதர் முஹம்மத் நபி(ஸல்) இப்புனித பூமியில் அவதரித்தார்கள்.

18.மகாமு இப்ராஹீம் -நபி இப்றாஹீ(அலை) அவர்கள் கஃபாவை நிர்மாணிக்கும் பொழுது ஒரு கல்லில் மீது நின்றுகொண்டிருந்தார்கள்.அதில் அவரது பாதங்கள் இரண்டும் பதிந்திருந்தன.இக்கல் இருந்த இடமே மகாமு இப்றாஹீம்.

19.மத்ரஸா - இதன் பொருள் கல்வி போதிக்கப்படும் இடம் என்பதாகும்.பொதுவாக மார்க்க கல்வி போதிக்கப்படும் கல்லூரிகளை த்ரஸா என்று குறிப்பிடுவர்.

20.மதீனா - இதன் பொருள் பட்டணம்,நகரம் என்பதாகும்.இது சவூதி அரேபியாவில் உள்ள ஹிஜாஸ்மாநிலத்தில் புனித மக்காவிற்கு வடக்கே 320 மைல் தொலைவில் உள்ள இஸ்லத்தின் புண்ணிய நகரங்களுள் ஒன்று.இங்கேதான் அண்ணல் நபி(ஸல்) அவர்களுடைய,அவர்களது தோழர்களுடைய,இன்னும் பலருடைய அடக்கஸ்தலங்கள் உள்ளன.

21.மஸ்ஜித் - சுஜூத் என்னு சொல்லில் இருந்து பிறந்த இதன் பொருள் தொழுமிடம் என்பதாகும்.இந்தியாவில் முதன் முதல் கட்டப்பட்ட மஸ்ஜித் கி.பி 642 -ல் மாலிக் இப்னு தீனாரால் ,கேரளா மாநிலத்திலுள்ள கொடுங்கலூரில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளி வாசலாகும்.ஐவேளைத்தொழுகைகள் நடத்தப்படும் பள்ளிவாசல்..உலகில் இறைவனை தொழுவதற்காக நிர்மாணிக்கப்பட்ட முதல் தொழுமிடம் புனித 'கஃபா'இஸ்லாமியர் எங்கெங்கு இருந்தார்களோ அங்கங்கு எல்லாம் தொழுமிடங்களை எழுப்பினார்கள்.

22.மஹர் - இஸ்லாமிய சட்டத்தின் படி மணமகன் தான் முடிக்கும் பெண்ணுக்கு கொடுக்கும் திருமணக்கட்டணத்திற்கு இப்பெயர் வழங்கப்படுகின்றது.இதைப்பற்றி அல்குர் ஆனில் "நீங்கள் திருமணம் செய்துகொண்ட பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்.அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் மனமார உங்களுக்கு விட்டுத்தந்தால் அதனை நீங்கள் தாரளமாக மகிழ்வுடன் புசியுங்கள்."(4:4)என்று இறைவன் கூறுகின்றான்.இதை முஸ்லிம் மணமகன்,மணமகளுக்கு கட்டாயம் செலுத்த வேண்டிய விவாக கட்டணம் என்றும் சொல்லலாம்.
இன்னும் வரும்.

Sunday, November 7, 2010

அரபிப் பதத்தின் விளக்கம் - 1

உலகில் வாழும் அரபி அல்லாத முஸ்லிம்கள் அரபுச்சொற்களை மிக அதிகளவில் உபயோகிக்கின்றனர்.அவற்றுக்கான தமிழ் விளக்கம்.

1.அன்ஸாரிகள் - அன்ஸார் என்பதற்கு உதவியாளர்கள் என்று பொருள்.யமன் நாட்டிலிருந்து மஃரிப் நீர்தேக்கத்தில் கி.பி 542 - 57 இல் உடைப்பு ஏற்பட்ட பொழுது அங்கிருந்து வந்து குடியேறிய அவ்ஸ்.கஜ்ரஜ் ஆகிய இரு பெரும் குலத்தோரே பின்பு அன்ஸாரிகளானார்கள்.மக்காவைத்துறந்து புனித மதீனாவுக்கு வந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை அகமும்,புறமும்மலர வரவேற்ற ஆதரவாளர்கள் அன்ஸாரிகள்.மதீனா வாசிகள் அன்று போல் இன்றும் பண்பாட்டின் சின்னமாக விளங்குகின்றனர்.

2.அரபி - இன்று அரபி மொழி உலகில் பல்வேறு பகுதிகளில் பேசப்படும் மொழிகளில் ஆங்கிலம்,ஸ்பானிஷ் மொழிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப்பெற்றுத் திகழ்கின்றது.உலக மொழி ஆய்வினர் அரபியே உலகின் முதன் மொழி என்று கூறுகின்றனர்.உலகப்பொதுமறை திருகுர் ஆன் இறக்கப்பட்ட மொழி அரபி மொழியே ஆகும்.அரப் என்ற பதத்திற்கு உற்சாகம்,தெளிவான பேச்சு,வெளிப்படையான மொழி எனப் பல பெயர்கள் உண்டு.

3.அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன்.இது தூய அல்லாஹ் ஒருவனுக்கே பொருத்தமானது.அல்லாஹ்வின் அழகிய திரு நாமங்களில் ஒன்று.

4.அலை - அலைஹிஸ்ஸலாம் என்பதின் சுருக்கமே அலை.இதன் பொருள் அவர்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும் என்பதாகும்.இஸ்லாமிய வழக்கில் பெரும்பாலும் நபிமார்களின் பெயர்களை சொல்லப்பட்டவுடன் கூறப்படுவதாகும்.சில சமயம் தூதரல்லாத முன் சென்ற சில நல்லடியார்களுக்கும் சொல்லப்படும்.உதாரணம்:மர்யம்(அலை),லுக்மான்(அலை)

5.இன்ஷா அல்லாஹ் - இவ்வார்த்தைகளின் பொருள் 'அல்லாஹ் நாடினால்' என்பதாகும்.ஒருவர் ஒரு வாக்குறுதியை அது எத்தனை சிறியதாயினும் அதனை அளிக்கும் முன் 'இன்ஷா அல்லாஹ்'கூறின் அவர் அவ்வாக்குறுதியை மனப்பூர்வமாக நிறை வேற்ற கடமைப்பட்டுள்ளார்.

6.இஸ்லாம் - ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து,இறைவன் மனித உற்பத்தியை தொடங்கினான்.மனித குலத்தை நேர்வழிப்படுத்த இறைத்தூதர்களை மனிதர்கள் இடையே அனுப்பி வைத்தான்.எல்லாத்தூதர்களும் ஓரிறைக்கொள்கையை மட்டுமே போதித்தனர்.இந்த ஒரிறைக்கொள்கையின் மார்க்கமே இஸ்லாம்.'இஸ்லாம்'என்ற சொல்லுக்கு (அல்லாஹ்வுக்கு)அடி பணிதல் என்றும்,'முஸ்லிம்' என்ற சொல்லுக்கு (அல்லாஹ்வுக்கு)அடிபணிபவர் என்றும் பொருளாகும்.இறுதித்தூதர் எடுத்துரைத்த ஏக இறை மார்க்கத்தை கடைபிடிப்பதே இஸ்லாமாகும்.

7.இப்லீஸ் - இச்சொல்லுக்கு நிராசையுறுதல் என்று பொருள்.இறைவனின் பேரருளை விட்டும் இப்லீஸ்(ஷைத்தான்)நிராசையுற்று விட்டதால் அவனுக்கு இப்பெயர் ஏற்பட்டது.மனிதனை வழிகெடுப்பதே இவனின் குறிகோளும்,வேலையுமாகும்.இவன் நெருப்பால் படைக்கப்பட்ட ஜின் இனத்தை சேர்ந்தவன் ஆவான்.இறை கட்டளையை ஏற்க மறுத்த காரணத்தினால் இறைவனின் கருணையில் இருந்து நீக்கப்பட்டான்.

8.உம்ரா - நாடுதல்,சந்தித்தல்,வழிபடுதல் என்று பொருளாகும்.கஃபாவுக்கு செல்வது இரு வகைப்படும்.1.ஹஜ் 2.உம்ரா. உம்ராவுக்கு ஹஜ்ஜின் அத்தனை நிபந்தனைகளும் உள்ளன.ஆனால் ஹஜ்ஜை குறிப்பிட்ட காலம் வரைதான் நிறைவேற்ற இயலும்.ஆனால் உம்ராவை எக்காலத்திலும் நிறைவேற்றலாம்.புனித கஃபாவை தரிசித்து இறைவனை வழிபடும் ஒரு வழிபாடு எனவும் பொருள் கொள்ளலாம்.

9.உளூ - தொழுவதற்காக தண்ணீரால் உடலைத் தூய்மை செய்து கொள்வதற்கு 'உளு'எனக்கூறப்படுகின்றது.தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்னால் முகம்,வாய்,மூக்கு,தலை,காது,கால் முதலியவற்றை நபிகளாரின் வழிமுறைகளுக்குட்பட்டு,தூய்மைப்படுத்திக்கொள்ளும் அங்கசுத்தி முறையாகும்.

10.கஃபா - மக்காவில் உள்ள இறை இல்லத்திற்கு கஃபா என கூறப்படுகின்றது.இதன் முழுப்பெயர் கஃபதுல்லாஹ் எனப்படும்.இறைத்தூதர் இப்றாஹீம்(அலை) அவர்களாலும்,அவர்களது திருமகனார் இஸ்மாயீல் (அலை)அவர்களாளும் மக்காவில் எழுப்பப்பட்ட முதல் இறை ஆலயம்.இஸ்லாத்தில் கஃபா சிறப்பான இடத்தை வகிக்கின்றது.உலகில் உள்ள முஸ்லிம்கள் அதனை முன்னோக்கியே இறைவனைத்தொழுகின்றனர்.ஹஜ் கடமை இங்குதான் நிறை வேற்றப்படுகின்றது.இதற்கு 'மஸ்ஜிதுல் ஹராம்' புனித மிக்க பள்ளிவாசல் என்றும் பெயருண்டு.

இன்னும் வரும்.



3 நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கலாகாது.


உம்முஹாத்துல் முஃமினீன் அன்னை உம்மு ஹபீபா(ரலி)அவர்களின் தந்தை அபு சுப்யான் மரணமடைந்த மூன்றாம் நாள் உம்முஹபீபா(ரலி)அவர்கள் நறுமணத்தை வரவழைத்துப்பூசிக்கொண்டார்கள்.தந்தை இறந்த மூன்றாம் நாளே நறுமணம் பூசி சந்தோஷம் சந்தோஷம் கொண்டாடுகின்றாரே என்று அதனைக்கண்டவர்களுக்கு எல்லாம் வியப்பு.காரணம் கேட்ட பொழுது இவ்வாறு விளக்கம் கூறினார்கள்
"எனக்கு நறுமணம் பூசிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் நான் நறுமணத்தை பூசிக்கொள்ள வில்லை.ஒரு பெண்ணுக்கு தன் கணவன் தவிர வேறு எவருக்காகவும் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்க அனுமதி இல்லை என்ற நாயக வாக்கை மெய்பிப்பதற்காக அதனை அனுசரித்து நான் நறுமணம் பூசி,மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கவில்லை என்று காட்ட இவ்வாறு செய்தேன்"என்று கூறினர்.



Friday, October 29, 2010

ஜமராத்



மினா என்னும் இடத்திலுள்ள குறிப்பிட்ட மூன்று இடங்களுக்கு ஜமராத் எனப்படும்.இம்மூன்று இடங்களும் ஒன்றுக்கொன்று சுமார் அரை பர்லாங் இடை வெளியில் உள்ளன.

நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் தங்கள் தவப்புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ்வின் ஆணைப்படி இறைவனுக்காக பலியிட அழைத்துச் சென்ற போது இப்லீஸ் நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் முன் தோன்றி அவர்களின் அந்த தியாகத்தை முறியடிக்க முயன்றான்.அவனை அறிந்து கொண்ட இப்றாஹீம் (அலை)அவர்கள் இப்லீஸ் மீது கல்லெறிந்து அவனை விரட்டினார்கள்.அதன் காரணமாக அம்மூன்று இடங்களிலும் கல் எறிவது வாஜிப் ஆக்கப்பட்டுள்ளது.

மினாவின் கூடாரங்களில் இருந்து போனால் முதலில் வருவது ஜம்ரத்துல் ஊலா என்றும்,அடுத்து வருவது ஜம்ரத்துல் உஸ்தா என்றும்,கடைசியில் உள்ளது ஜம்ரத்துல் அக்பர் என்றும் பெயர் சொல்லப்படுகின்றது.இவற்றை முறையே சிறிய ஷைத்தான்,நடு ஷைத்தான்,பெரிய ஷைத்தான் என்றும் மக்கள் கூறுகின்றனர்.

ஹாஜிகள் கல்லெறியும் போது சில சமயம் நெரிச்சலில் சிக்கி சிலர் இறந்தும் போவார்கள்.இதற்கு காரணம் என்னவென்றால் கல்லெறியுமிடம் சுமார் இருபது அடி அகலத்தில் முற்றிலும் சுவர் எழுப்பப்பட்டு ஒரு தூண் நடுவில் அமைக்கப்பட்டிருந்தது.

இப்பொழுது மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது.பல லட்சம் மக்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் இந்த இடத்தில் ஒன்று கூடுவதால் நெரிச்சல் ஏற்படுகின்றது.எனவே மிகவும் கவனமாக கல்லெறிய வேண்டும்.

இப்பொழுது சவுதி அரசாங்கம் அவ்விடத்தில் இரண்டடுக்கு மேம்பாலங்கள் கட்டி போவதும்,வருவதும் ஒரு வழிப்பாதையாக ஆக்கி வசதிகளை அமைத்துத்தந்துள்ளது.இதனால் ஹாஜிகள் இப்போதெல்லாம் நெரிசலும்,சிரமமும் இல்லாமல் போய் கல்லெறிந்து வருகின்றனர்.



Wednesday, October 13, 2010

அல் குர்ஆனின் அழகிய திருநாமங்கள்



பேரற்புதம் வாய்ந்த எதற்கும் நிகரில்லாத திருக்குர்ஆனுக்கு அல்லாஹ் குர் ஆனிலேயே பல இடங்களில் பல்வேறு பெயர்களைக் குறிப்பிட்டுள்ளான்.ஒவ்வொரு பெயரும் திருகுர் ஆனின் சிறப்புத்தன்மையை தெரிவிப்பதாக அமைந்துள்ளது.ஒரு பொருளுக்கு அதிகமான பெயர்கள் இருப்பது அதனுடைய சிறப்பையும்,உயர்வையும் காட்டக்கூடியது என்பது திண்ணம்.

1.அல் கிதாப் - வேதநூல்

2.அல் பயான் - தெளிவுரை

3.அல் புர்ஃகான் - நன்மையையும் தீமையையும் பிரித்தறிவிப்பது

4.அல் புர்ஹான் - தெளிவான அத்தாட்சி

5.அத் திக்ரு - நினைவுறுத்துவது

6அந் நூர் - ஒளி

7.அல் ஹக்கு - சத்தியமானது

8.அல் கரீம் - கண்ணியத்திற்குறியது

9.அல் முபீன் - தெளிவுபடுத்தக்கூடியது

10.அல் ஹகீம் - ஞானம் நிறைந்தது

11.அல் அஜீஸ் - மதிப்பிற்குறியது

12.அல் ஹுதா - நேர்வழி

13.அர் ரஹ்மத் - அருள்

14.அஷ் ஷிபா - நிவாரணமளிப்பது

15.அல் மவ்இளத் - நல்லுபதேசம்

16.அல் ஹிக்மத் - ஞானம்

17.அல் முஹைமின் - பாதுகாவலாக இருப்பது

18.அல் கய்யிம் - உறுதியானது

19.அந் நிஃமத் - அருட்கொடை

20.அர் ரூஹ் - உயிருள்ளது

21.அத் தன்ஜீல் - இறக்கிவைக்கப்பட்டது

22.அல் ஹுக்மு - சட்டம்

23.அல் முபாரக் - புனிதமாக்கப்பட்டது

24.அல் முஸத்திக் - உண்மையாக்கி வைக்கக்கூடியது

25.அல் பஷீர் - நற்செய்தி கூறுவது

26.அந் நதீர் - அச்சுறுத்தி எச்சரிப்பது.

27.அல் முதஹ்ஹரா - பரிசுத்தமாக்கப்பட்டது

28.அல் முகர்ரமா - சங்கைக்குறியது

29.அல் மஜீத் - மேன்மைக்குறியது

30.அல் அரபிய்யு - அரபி மொழியுடையது

31.அல் மர்ஃபூஆ - உயர்வானது

32.அல் அஜப் - ஆச்சரியமானது

33.அல் பஸாயிர் - ஆதாரமுள்ளது

34.அத் திக்ரா - நினவூட்டும் உபதேசம்

35.ஹப்லுல்லாஹ் - அல்லாஹ்வின் கயிறு






Sunday, October 10, 2010

முஸ்தலிஃபா


முஸ்தலிஃபா என்பது மினாவுக்கும்,அரஃபாத்துக்கும் இடையில் உள்ள ஒரு இடமாகும்.இந்த இடத்தைப்பற்றி அல்லாஹ் அல் குர் ஆனில் கூறுகின்றான்."நீங்கள் அரஃபாவிலிருந்து திரும்பினால் 'மஷ் அருல் ஹராம்'என்னுமிடத்தில் அல்லாஹவை திக்ரு செய்யுங்கள்"(2:198) என்று.இங்கு குர் ஆனில் சொல்லப்பட்ட இடம் முஸ்தலிஃபா ஆகும்.

துல் ஹஜ் மாதம் 9,10 ஆவது நாள்களுக்கு இடையே உள்ள இரவில் ஹாஜிகள் இங்கே தங்க வேண்டும்.அதைத்தான் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.முஸ்தலிஃபாவில் உள்ள பள்ளிவாசலுக்கு பெயர்தான் 'மஸ்ஜிதுல் ஹராம்' என்பதாகும்.இந்த பள் ளியில் தொழுவது சிறப்புக்குறிய காரியமாகும்.இங்கேயும்,முஸ்தலிஃபா ,மைதானத்திலும் துஆ ஒப்புக்கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.

நபி (ஸல்)அவர்கள் ஹஜ் செய்த பொழுது துல்ஹஜ் பிறை 9ஆம் நாள் சூரியன் மறைந்த பிறகு அரஃபாவிலிருந்து புறப்பட்டு,இரவானதும் முஸ்தலிஃபா வந்து சேர்ந்தார்கள்.இங்கு மஃரிப்,இஷா தொழுகை இரண்டையும் ஒரு பாங்கு,ஒரு இகாமத் சொல்லித்தொழுதார்கள்.இரண்டுக்குமிடையிலோ,அதற்கு பின்போ யாதொரு நபில் தொழுகையும் தொழுகவில்லை.சுபுஹு தொழுகையை விரைவாக தொழுது விட்டு தல்பியா ஓதியவாறு மினாவுக்குப்புறப்பட்டனர்.அப்போது கல்லெறிவதற்காக நபி(ஸல்)அவர்கள் கேட்டதன் படி இபுனு அப்பாஸ்(ரலி) அவர்கள் பொடிக்கற்களைப் பொறுக்கிக்கொடுத்தனர்.

இதன் படி அங்கே ஹாஜிகள் 70 பொடிக் கற்களைப் பொறுக்கிக்கொள்ள வேண்டும்.பாலைவனம் நிறைந்த அந்த நாட்டில் முஸ்தலிஃபாவில் மட்டும் எங்கு பார்த்தாலும் பொடிக்கற்களாவே தென் படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ஹாஜிகள் கல் பொறுக்குகின்றனர்.கல் பற்றாக்குறை வருவதே இல்லை.இது அல்லாஹ்வின் அற்புதமாக உள்ளது.இந்த இடம் துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதில் விஷேஷ அந்தஸ்த்தைப்பெறுகின்றது.

முஸ்தலிஃபாவில் தங்கிய ஹாஜிகள் அனைவரும் மினாவை நோக்கி நகர்ந்து செல்வர்,அப்போது ஒரே மைதானத்தில் ஹாஜிகள் அனைவரையும் பார்க்கும் பொழுது மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு முன்னால் எல்லா மனிதர்களும் நிறுத்தப்படும் காட்சி நினைவுக்கு வரும்.

ஒளி,ஒலிக்காட்சிகளைக்காண இங்கு கிளிக் செய்யுங்கள்

Thursday, October 7, 2010

அரஃபா

அரஃபா

இது மக்காவிற்கு கிழக்கே 12 கல் தொலைவில் உள்ள மலையாகும்.அதைச்சுற்றியுள்ள மைதானத்திற்கு சொல்லப்படும் பெயர் அரஃபா ஆகும்.அரஃபா என்றால் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளுதல் என்று பொருள்.

அல்லாஹ் விண்ணகத்திலிருந்து ஆதம் (அலை) அவர்களையும்,ஹவ்வா (அலை)அவர்களையும் பூமிக்கு இறக்கினான்.பிறகு இருவரும் அழுது பாவ மன்னிப்புத்தேடிய பின் இருவரையும் இங்கேதான் சந்திக்க வைத்தான்.இங்கே தான் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டனர்.அதனால் இதற்கு அரஃபா(அறிந்து கொண்ட இடம்) என்னும் பெயர் வந்தது.

அரஃபா மைதானம் சுமார் 8 மைல் நீளமும்,4 மைல் அகலமும் கொண்டதாகும்.இங்கே ஜபலே ரஹ்மத்(அருளின் மலை)என்று ஒரு மலையும் உண்டு.இந்த இடத்தில் வைத்து ஆதம்,ஹவ்வா(அலை) இருவர் மீதும் இரக்கம் காட்டி பாவங்களை மன்னித்து ஒன்று சேர்த்ததால் அப்பெயர் வந்தது.இந்த மலை சுமார் 200 அடி உயரம் இருக்கும்.இதன் மீது ஏறிச்செல்ல படிகள் உள்ளன.இதன் உச்சியின் மீது ஏறி நின்றுதான் நபி(ஸல்) அவர்கள் இறுதிப் பேருரை நிகழ்த்தினார்கள்.

அர்ஃபா மைதானத்தில் ஹாஜிகள் துல்ஹஜ் பிறை 9 இல் மாலை வரைத்தங்க வேண்டும்.இது ஹஜ்ஜின் முக்கிய கடமை(பர்ளு) ஆகும்.எவரேனும் சிறிது நேரமாவது இங்கு தங்கவில்லை என்றால் ஹஜ் முழுமை பெறாது.

இங்கு வைத்து கேட்கப்படும் பிரார்த்தனை உடனே அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நபி(ஸல்;) அவர்கள் கூறி உள்ளனர்.அவர்களும் இங்கே அழுது துஆ செய்து இருக்கின்றனர்.அதனால் மக்கள் கண்ணீர் விட்டு அழுது இங்கு அந்நாளில் துஆ செய்யும் காட்சி உள்ளத்தை உருக்குவதாக இருக்கும்.

மாலையானதும் மஃரிபு தொழாமல் முஸ்தலிஃபா சென்று ஹாஜிகள் மஃரிப்,இஷாவையும் சேர்த்து தொழுவர்.அர்ஃபாத்தில் தங்கும் நாளை அரஃபா நாள் என்பர்."இந்த அரஃபா நாளை விட எந்த நாளிலும் அல்லாஹ் தன் அடியார்களை நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை.மேலும் அல்லாஹ் மிகவும் அண்மையில் வந்திறங்கி வானவர்களிடம் ஹஜ்ஜு செய்பவர்களைப்பற்றி பெருமை பாராட்டி பேசுகிறான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அரஃபா நாள் வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அதற்கு ஹஜ்ஜுல் அக்பர் என்று சொல்லப்படும்.அது 70 ஹஜ்ஜுகளுக்கு சமமாகும் என்பது நாயக வாக்கு.

இங்கே மஸ்ஜிதுன் நமிரா என்ற பிரம்மாண்டமான பள்ளிவாசல் உள்ளது.அன்று லுஹரையும்,அஸரையும் சேர்த்து லுஹர் நேரத்திலேயே இமாம் தொழ வைப்பார்.பல லட்சம் மக்கள் அவர் பின்னால் நின்று தொழுவார்கள்.

ஒலி,ஒளிக்காட்சிகளை இங்கு காணுங்கள்.

Wednesday, October 6, 2010

மினா





மினா


மக்காவிற்கு ஐந்துமைல் தூரத்தில் அரபாத் செல்லும் வழியில் உள்ள ஒரு ஊருக்குப்பெயர்தான் மினாவாகும்.மினா என்றால் விருப்பம் என்று பொருளாகும்.இங்குதான் ஆதம் நபி(அலை) அவர்கல் சுவனம் மீள் விரும்பியதன் காரணமாக இவ்விடத்திற்கு இந்தப்பெயர் ஏற்ப்பட்டது என்று கூறப்படுகின்றது.

இங்கே இரண்டு நீளமான தெருக்கள் உள்ளன.அவற்றில் பெரும்பாலும் கட்டிடங்கள் உள்ளன.எனினும் பெரும்பாலும் அவை காலியாகவே இருக்கும்.ஹஜ் காலங்களில் மட்டும் வாடைகைக்கு விடப்படும்.

மேலும் நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்து சுமார் 1400 ஆண்டுகளாக அந்த இடம் ஹஜ் கடமையை நிறை வேற்றுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.எனவே ,இங்கே வீடு,கடைகள் போன்ற எந்த கட்டிடங்களும் கட்டக்கூடாது என்று சவுதி அரசாங்கம் தடை விதித்துள்ளது.ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் இந்த இடத்தில் தங்கித்தான் ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள்.இங்கு துல்ஹஜ் பிறை8 ,மற்றும் 10,11,12,அகிய நாண்கு நாட்கள் ஹாஜிகள் தங்கி இருப்பது அவசியமாகும்.

சுமார் 30 லட்சம் ஹாஜிகள் கூடாரமடித்துத் தங்கக்கூடிய அளவு வசதி உள்ள பிரமாண்டமான மைதானம் இங்கே உள்ளது.சவுதி அரசாங்கம் தீ பிடிக்காத குளிர்சாதனவசதி உள்ள சுமார் 30 லட்சம் ஹாஜிகளுக்கு தேவையான கூடாரங்களை தண்ணீர் வசதியுடன் ஏற்படுத்தித்தந்திருக்கின்றது.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் மகன்இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்துப்பலியிட முயற்சித்த இடமும் இதுதான்.எனவே ஹாஜிகள் இங்கே குர்பானி கொடுக்க வேண்டும்.மேலும் ஹாஜிகள் ஷைத்தானுக்கு கல் எறியும் ஜம்ரா என்ற இடங்களும் இங்குதான் உண்டு.இங்கு மஸ்ஜிதுன் கைப் என்ற பள்ளிவாசலும் உண்டு.இங்கு ஆதம்(அலை) அவர்களும் மற்ற எழுபது நபிமார்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் அந்தப்பள்ளியில் தங்குவது விஷேஷமானது என்றும் கூறப்படுகின்றது.

மேலும் மினா துஆ ஒப்புக்கொள்ளப்படும் இடமாகவும் இருக்கிறது.ஹாஜிகள் ,இங்கே அதிகமாக வணக்கங்களில் ஈடு படவேண்டும்.ஹஜ்ஜுடைய ஐந்து நாட்களைத்தவிர வருடத்தின் மற்ற நாட்களில் காலியாகவே இருக்கும்.


Tuesday, October 5, 2010

ஸஃபா - மர்வா




"இது கஃபாவுக்கு அருகில் உள்ள இரு குன்றுகளின் பெயர்களாகும்."இதைப்பற்றி அல்லாஹ் அல் குர் ஆனில்

"நிச்சயமாக ஸஃபாவும்,மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும்.(2:158)என்று கூறுகின்றான்.

ஆதம் ஸஃபியுல்லாஹ்(அலை)அவர்கள் ஸஃபா மலை மீது உட்கார்ந்ததால் அதற்கு அந்தப் பெயர் வந்தது என்றும்,ஹவ்வா (அலை) அவர்கள் மர்வா மலை மீது உட்கார்ந்ததினால் மர்வா(பெண் - மனைவி)என்று பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.அரபிகள் இரு மலைகளிலும் அஸஃப்,நாயிலாஎன்ற சிலைகளை வைத்து தொங்கோட்டம் ஓடித் தொட்டு வந்தனர் என்றும் பின்னர் ,அரபிகள் இஸ்லாத்தை ஏற்ற பின் அச்சிலைகள் அகற்றப்பட்டன.என்றும் வரலாறு கூறுகின்றது.பின்னர் அதில் தொங்கோட்டம் ஓடுவதில் மக்கள் ஐயமுற்றபோது அல்லாஹ் அதனால் குற்றமில்லை என்று செய்தி அனுப்பினான்.

மேலும் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நபி இப்றாஹீம்(அலை) ,தங்கள் மனைவி ஹாஜரா,குழந்தை இஸ்மாயீல் இருவரையும் இங்கே அல்லாஹ்வின் கட்டளைப்படி கொண்டு வந்து விட்டு சென்றனர்.மனிதர்கள் இல்லாத பாலைவனமாக இருந்த அந்த இடத்தில் குழந்தை இஸ்மாயீலை படுக்க வைத்துவிட்டு,அன்னை ஹாஜரா ஸஃபா- மர்வா மலைகளுக் கிடையே தண்ணீரைத்தேடி இங்குமங்கும் ஓடினார்கள்கள்.அன்னை ஹாஜரா(அலை)அவர்கள் ஏழுதடவை ஓடி இறைஞ்சியதால் அவர்களின் துஆவை ஏற்றுக்கொண்டு அல்லாஹ் குழந்தையின் காலடியில் ஜம்ஜம் நீரைத் தந்தான்.அவர்கள் ஓடிய அந்த ஓட்டத்தை அல்லாஹ் நமக்கு ஹஜ்ஜு,மற்றும் உம்ராவின் வணக்கமாக ஆக்கித்தந்துள்ளான்.

எனவே ஹஜ்ஜோ,உம்ராவோ செய்யக்கூடியவர்கள் ஸஃபா - மர்வா இடையே ஏழு முறை தொங்கோட்டம் ஓடுவது வாஜிபாக ஆக்கப்பட்டுள்ளது.

ஹாஜிகளின் எண்ணிக்கை பல மடங்கு கூடி விட்டதால் ,ஸஃபா,மர்வாவில் போக்கு வரத்து வசதிக்காக மேலும்,கீழுமாக 4 மடங்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Sunday, October 3, 2010

ஜம் ஜம் கிணறு

ஜம் ஜம் கிணறு

இது மக்காவின் கஃபாவுக்கு அருகிலுள்ள சிறப்பான கிணறாகும்.சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்,நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் ,தங்கள் மனைவி ஹாஜரா அம்மையாரையும்,மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் அல்லாஹ்வின் கட்டளைப்படி மக்காவில்,இப்போதிருக்கும் கஃபா இருக்கும் இடத்தில் கொண்டுவந்து தனியாக விட்டு விட்டு சென்றார்கள்.அப்பொழுது குழந்தை இஸ்மாயீல் தாகம் மேலிட்டு கதறி அழுதார்கள்.

தம்மிடம் பாலோ,தண்ணீரோ இல்லாத அன்னை தண்ணீர் தேடி ஸஃபா - மர்வா மலைகளுக்கிடையே ஏழுதடவை நடந்தும் ,ஓடியும் தண்ணீரை பெற முடியவில்லை.

அப்பொழுது தன்னந்தனியே கிடந்த குழந்தை இஸ்மாயீல் (அலை) தன் பிஞ்சுக்கால்களால் தரையில் உதைத்து அழுத பொழுது அவ்விடத்தில் தண்ணீர் கொப்பளித்துக்கொண்டு வந்தது.அதை வழிந்தோடா வண்ணம் மண்ணால் அதனை சுற்றி ஒரு மேடெழுப்பி நீரைத்தேக்கினார்கள்.

அதுவே ஜம்ஜம் கிணறாக விளங்குகின்றது."ஜம் ஜம்"என்றால் அதிகம் என்று பொருள்.நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன் ஜுர்ஹூம் கூட்டத்தினர் இந்தக்கிணற்றினை அடையாளம் தெரியாமல் மூடி விட்டு போய் விட்டனர்.பின்னர் நபி(ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் கனவில் இடம் காட்டப்பட்டு இக்கிணற்றைத்தோண்டி அவர்களே பராமரித்து வந்தனர்.

நபி(ஸல்) அவர்கள் சிறு பிராயத்தில் ஒரு தடவை இக்கிணறு மராமத்து செய்யப்பட்டது.அதில் நபி(ஸல்) அவர்களும் கலந்து கொண்டார்கள்.அப்பொழுது இதன் ஆழம் 90 அடி.அகலம் 6 அடி.

அதன் நீர் ருசியில் சற்று இளைப்பாக இருந்தாலும் இதில் பல்வேறு மருத்துவகுணங்களும்,உடல் நலத்திற்குத்தேவையான பல சிறப்புத்தன்மைகளும் அமைந்துள்ளதால் ,"பூமியில் உள்ள நீர்களில் மிகச்சிறந்தது ஜம்ஜம் நீராகும்"என்பதாகவும்,"ஜம்ஜம் எதற்காக குடிக்கப்படுகின்றதோ அதற்குரியதாகும்"என்பதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.

மேலும் இந்தக்கிணற்றருகே நின்று துஆ கேட்டால் உடனே ஏற்றூகொள்ளப்படும் என்றும் கூறினார்கள்.மேலும் இந்நீர் வற்றாத நீர்ச்சுணை ஆகும்.ஒரு தடவை மருத்துவர்கள் சுகாதரத்திற்காக இக்கிணற்றை சுத்தப்படுத்த ஆலோசனை சொன்ன பொழுது அதை ஏற்ற சவுதி அரசாங்கம் எட்டு பம்பு செட்டுகள் வைத்து 15 நாட்கள் இரவு பகலாக இதன் நீரை இறைக்க முயன்றும் முடியவில்லை.நீர் குறைவதற்கு பதில் ஒரு அங்குலம் உயர்ந்திருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ஹாஜிகள் உபயோகித்தும்,தங்களுடன் லட்சக்கணக்கான கேன்களில் எடுத்துச்சென்றும் அது குறைவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது ஹாஜிகள் ஜம்ஜம் கிணற்றினை பார்க்க இயலாது.கஃபாவின் விஸ்தரிப்புக்கு முன்பு ஜம்ஜம் கிணற்றின் பழைமையான தோற்றம் படத்தில் காண்பது.

மகாமு இப்றாஹீம்



Text Color


மகாமு இப்றாஹீம்

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் உத்தரவுப்படி கஃபாவை கட்டினார்கள்.அப்போது நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் உதவியாளராக இருந்தார்கள்.நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் ஒரு சிறிய கல் மீது நின்று கட்டிடத்தைக்கட்டினார்கள்.கட்டிடம் உயர,உயர கல்லும் வளர்ந்து கொண்டே இருந்தது.

அந்த கல்லுக்கு பெயர்தான் மகாமு இப்றாஹீம்.(இப்றாஹீம் நபி நின்ற இடம்) என்று சொல்லப்படுகின்றது.அக்கல்லின் மீது இப்றாஹீம் (அலை) அவர்களின் பாதங்கள் இரண்டும் பதிந்துள்ளது.அவற்றை உற்று கவனித்துப் பார்த்தால் நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் ஆறடிக்கும் மேல் உயரம் உள்ளவர்களாக இருந்திருப்பார்கள் என்று தெரிகிறது.

அப்துல் முத்தலிப் அவர்கள் தம்முடைய முதுமையில் தம்மக்களை நோக்கி தம் அருமைப்பேரர் முஹம்மது(ஸல்) அவர்களுடைய பாதத்தினை ஒத்திருப்பதாகவும்,அவர்களை நன்கு கவனித்து வரவேண்டும் என்றும் கூறியதாக ஒரு வரலாறு உண்டு.

இக்கல் நெடுங்காலமாக கஃபாவின் வாசலுக்கும் ருக்னுல் இராக்குக்கும் இடையில் உள்ள கஃபாவின் சுவரில் பதிக்கப்பட்டிருந்ததென்றும் நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கண்ட பொழுது இதை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தி கஃபாவின் வாசலின் பக்கம் வைத்து இதன் மீது சிறு கட்டிடம் எழுப்பினர் என்றும் அவர்கள் இவ்வாறு செய்ததற்கு காரணம் மக்கள் கஃபாவை சுற்றி வரும் பொழுது இதனையும் சேர்த்து சுற்றி வருவதாக கருதி விடக்கூடாது என்பதற்காகவே என்றும் கூறப்படுகின்றது.

பிறகு உமர்(ரலி) அவர்கள் ஆட்சியில் மக்களின் நெரிசலை தவிர்க்க இது கஃபாவிற்கு சற்று கிழக்கில் தள்ளி வைக்கப்பட்டு இதன் மீது சிறு கட்டிடம் கட்டப்பட்டது.தற்போது தங்க முலாம் பூசப்பட்ட கூண்டுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.ஹாஜிகள் அனைவரும் கண்டுவரலாம்.

மகாமு இப்றாஹீமைத் தொழும் இடமாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்று உமர் (ரலி) அவர்கள் அண்ணல் நபியவர்களிடம் கூறி வந்ததற்கேற்ப இறை கட்டளை வந்தது.

"மகாமு இப்றாஹீம் என்னும் இடத்தை தொழுமிடமாக ஆக்கிக் கொள்வீர்களாக! அல் குரான்2:125
இது துஆ ஒப்புக்கொள்ளப்படுகின்ற இடமாகவும் தவாப் முடிந்ததும் இங்கே இரண்டு ரகா அத் தொழ வேண்டும்.

Friday, October 1, 2010

ஹஜருல் அஸ்வத்




ஹஜருல் அஸ்வத்

இதன் பொருள் 'கருப்புக்கல்' என்பதாகும்.இது கருஞ்சிவப்பு நிறமாக இருந்தது.அரைவட்ட வடிவில் உள்ள இது ஆறு அங்குல உயரமும்,எட்டு அங்குல அகலமும் உள்ளதாகும்.இது தண்ணீரில் மிதக்கும் தன்மை உடையதாகும்."வானத்திலிருந்து ஆதம் நபி (அலை) அவர்கள் இதைக்கொண்டுவந்தனர்.அப்பொழுது அது பாலை விட வெண்மையாக இருந்தது.ஆதமுடைய மக்களின் பாவங்களால் அது கருப்பாகி விட்டது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்(ஆதாரம் திர்மிதி)

இந்தக்கல் ஒளி வீசக்கூடியதாக இருந்தது என்று அது ஒளி பாய்ந்த இடங்கள் வரை புனிதபூமி (ஹரம்) என்று நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் நிர்ணயித்தார்கள்.

நூஹ்(அலை) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்தின் போது இது அபுகுபைஸ் மலையில் வைத்து பாதுகாக்கப்பட்டது.

இப்ராஹீம் (அலை)அவர்கள் கஃபாவை கட்டிய பொழுது ,ஜிப்ரீல் (அலை) அவர்கள் அதனை கஃபாவின் தென் கிழக்கு மூலையில் பதித்தார்கள்.அது கஃபாவை தவாஃப் செய்வதற்கு துவக்க இடமாக ஆக்கப்பட்டுள்ளது.

பிறகு பனூ ஜர்ஹம் கூட்டத்தார் மக்காவை காலி செய்த பொழுது இதை ஜம்ஜம் கிணற்றுக்குள் போட்டு புதைத்து விட்டு சென்றனர்.பின்னர் நபி(ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் ஜம்ஜம் கிணற்றைத் தோண்டும் பொழுது இதனை கண்டு பிடித்து எடுத்து கஃபாவில் இதற்குறிய மூலையில் பதித்தார்கள்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு 35 வயதானபொழுது கஃபா புனர் நிர்மானம் செய்யப்பட்ட சமயம் இந்தக்கல்லை அதற்குறிய இடத்தில் எடுத்து வைக்கும் சிறப்பு நபி(ஸல்) அவர்களுக்கே கிடைத்தது.ஹிஜ்ரி 64 இல் ஏற்பட்ட நெருப்பால் இது மூன்று துண்டுகளாக உடைந்தது.அதை இபுனு ஜுபைர்(ரலி)அவர்கள் வெள்ளிக்கம்பியால் பிணைத்து இதற்குறிய இடத்தில் பிணைத்தனர்.

நபி(ஸல்) அவர்கள் இதனை முத்தமிட்டுள்ளார்கள்.மேலும் ஒட்டகத்தின் மேல் இருந்தவாறு தம் கைத்தடியால் தொட்டு கைத்தடியின் நுனியை முத்தமிட்டுள்ளார்கள்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, 'நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார். (அறிவிப்பாளர்: ஆபிஸ் இப்னு ரபீஆ)


ஹாஜிகள் அதனை முத்தமிடுவது சுன்னத்.எனினும் கூட்டம் அதிகமாக இருக்கும் பொழுது மற்றவர்களைத் தள்ளி முண்டியடித்துச் செல்வது கூடாது.கூட்ட நேரத்தில் அதன் பக்கம் கையை காட்டி அதனை முத்தமிடுவது சிறந்ததாகும்

நன்றி:
தமிழ்நாடு ஹஜ்சர்வீஸ் சொஸைட்டி

கஃபா






கஃபா.இது மக்காவில் உள்ள இறை இல்லம்.இதன் முழுப்பெயர் "கஃபதுல்லா"ஆகும்.அரபி மொழியில் கஃபா என்றால் சதுர வடிவானது என்று பொருள்.

இதற்கு பைத்துல் ஹரம்(கண்ணியம் மிக்க வீடு - இரத்தம் சிந்துதல் நிகழக்கூடாத ,பாதுகாப்பான வீடு)என்றும் பெயர் சொல்லப்படும்.

இதனை வானம்,பூமி ஆகியவற்றை படைப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அல்லாஹ் படைத்து விட்டான் என்று அபூஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள்.எனினும் அது கட்டிடமாக இல்லாமல் மணல்மேடாக இருந்தது.அதில் வானவர்கள் அமர்ந்து வணக்கம் செய்தனர்.

பிறகு ஆதி பிதா ஆதம்(அலை) அவர்கள் உலகில் இறக்கப்பட்டதும்,அல்லாஹ்வின் ஆணைப்படி அதில் கட்டிடம் கட்டினார்கள்.

ஷீது நபி (அலை) அவர்கள் இதனை சுற்றி நாண்கு புறமும் சுவர் எழுப்பினார்கள்.

அடுத்து வந்த நூஹ் நபி (அலை) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இது அழிந்தது.இருப்பினும் அடையாளமாக சிகப்பு நிற மணல் மேடு அங்கே இருந்தது.

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் இப்றாஹீம் நபி (அலை) அவர்கள் அல்லாஹ்வின் ஆணைப்படி கஃபாவை கட்டினார்கள்.

முதன் முதலில் எமன் நாட்டு மன்னர் துப்பவு அஸத் என்பவர் கஃபாவின் மீது போர்வையை போர்த்தி கவுரவித்தார்.

எல்லாகாலத்தில் மனிதர்கள் இதனை புனிதமான இறை இல்லமாகக் கருதி மரியாதை செய்தனர்.இதனைக்கண்டு பொறாமைக்கொண்ட எமன் நாட்டு மன்னன் அப்ரஹா என்பவன் கி.பி 570 ஆம் ஆண்டு தன் யானைப்படையோடு வந்து இதனை அழிக்க வந்தான்.ஆனால் அல்லாஹ் சிறு பறவைகளின் வாயில் கற்களை வைத்து வீசி அப்படைகளை அழித்துவிட்டான்.

எல்லா நபிமார்களும்,இங்கே வந்து அல்லாஹ்வை தொழுது இருக்கின்றார்கள்.ஹஜ் செய்து இருக்கின்றார்கள்.முஹம்மது நபி (ஸல்)அவர்களும் இங்கு தொழுதார்கள்.

கி.பி 631- இல் மக்கா வெற்றி கொள்ளப்பட்டு இது முற்றிலும் முஸ்லிம்கள் வசம் வந்தது.சுமார் 1400 ஆண்டுகளாக தொடர்ந்து உலக முஸ்லிம்கள் யாவரும் ஹஜ்ஜு செய்யும் இடமாக இருந்து வருகின்றது.கஃபாவை சுற்றியுள்ள பகுதிகளை பல மன்னர்கள் விரிவு படுத்தி உள்ளார்கள்.கடைசியாக ஹிஜ்ரி 1040 -இல் துருக்கி ஆட்சியின் பொழுது ரிஸ்வான் ஆகா என்ற பொறியாளர் மற்றும் இந்திய கட்டிடகலை நிபுணர் மஹ்மூது ஆகியோரால் கட்டப்பட்டது.இப்பொழுது சவுதி அரசால் மிகப் பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டு சுமார் 10 லட்சம் மக்கள் தொழும் பிருமாண்டமான மஸ்ஜித் ஆக அமைந்துள்ளது.

கருங்கல்லால் கட்டப்பட்ட கஃபாவின் உயரம் சுமார் 50 அடி,நீளம் 40 அடி,அகலம் 25 அடியாகும்.இதற்கு நாண்கு மூலைகள் உள்ளன.ருக்னுல் அஸ்வத்,ருக்னுல் யமானி,ருக்னுல் ஷாமி,ருக்னுல் இராக்கி ஆகியவையாகும்.இதனைச்சூழ 96 வாசல்கள் உள்ளன.9 மினாராக்கள் உள்ளன.எந்த நேரமும் எல்லா வாசல்களும் திறந்தே இருக்கும்.உலக முஸ்லிம்கள் அனைவரும் இந்த கஃபாவை நோக்கியே தொழுகின்றனர்.

நன்றி:
தமிழ்நாடு ஹஜ்சர்வீஸ் சொஸைட்டி

விருப்பம்

1.விழுங்க விரும்பினால் கோபத்தையும்,துக்கத்தையும் விழுங்கி விடுங்கள்.

2.உடுக்க விரும்பினால் உயர்வையும்,உண்மையையும் உடுத்திக்கொள்ளுங்கள்.

3.அறிய விரும்பினால் நன்மைகளையும் தீமைகளையும் அறிந்து கொள்ளுங்கள்.

4.கொடுக்க விரும்பினால் பிறருக்கு நலவைத்தருவதையும்,பயனளிக்கத்தக்கவற்றையும் கொடுங்கள்.

5.வாங்க விரும்பினால் ஏழை,அனாதைகளின் ஆசிகளை வாங்குங்கள்.

6.பேச விரும்பினால் இன்சொற்களையும்,நன் சொற்களையும் பேசுங்கள்.

7.அடிக்க விரும்பினால் மன இச்சைகளையும்,துவேஷங்களையும் அடித்து வீழ்த்துங்கள்.

8.களைய விரும்பினால் துர்பழக்கத்தையும்,முன்கோபத்தையும் களைந்துவிடுங்கள்.

9.உண்ண விரும்பினால் ஹலானவற்றியும்,தூயவனவற்றையும் உண்ணுங்கள்.

10.தர்கிக்க விரும்பினால் கண்ணியமானவர்களிடமும்,உயர்வானவர்களிடமும் தர்கியுங்கள்

Wednesday, September 29, 2010

மவுனத்தின் சிறப்பு


அபூபக்கர் சித்தீக்(ரலி)அவர்களின் மவுனம்

முதலாம் கலீஃபா ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக்(ரலி)அவர்கள் பெரும்பாலும் மவுனத்தையே அனுஷ்ட்டித்தார்கள்.அதிகமாக பேசுவதற்குறிய அபாயத்துக்கு அஞ்சி அதிகம் பேசுவதை வெறுத்தார்கள்.

ஒரு சமயம் உமர் (ரலி) அவர்கள் சித்தீக்(ரலி) அவர்களிடம் வந்து உரையாடத்தொடங்கினார்கள்.அது சமயம் சித்தீக் (ரலி) அவர்கள் தமது வாயில் இருந்த கற்களை எடுத்துவிட்டு பேசத்தொடங்கினார்கள்.

அது கண்டு உமர்(ரலி) அவர்கள் "என்ன காரணத்தினால் வாயில் கற்களை வைத்திருக்கின்றீர்கள்"எனக்கேட்டார்கள்.

அதற்கு சித்தீக் (ரலி) அவர்கள் "வாய் சும்மா இருந்தால் எதாவது வீண் பேச்சுக்கள் பேசும்.'வீண்பேச்சுக்கள் பேசுவதால் மனிதனின் உள்ளம் ஒளி மங்கி விடும்'என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதை நான் பல முறை கேட்டு இருக்கின்றேன்.ஆகவே என்னில் இருந்து வீண்பேச்சுக்கள் வெளிப்பட்டு இருக்காமல் இருக்க வாயில் கற்களை வைத்திருக்கின்றேன்.தேவைப்படும் பொழுது அதனை எடுத்துவிட்டு பேசுவேன்"என்றார்கள்;

தாஹா நபியின் தங்க உரைகள்:

ஆதமுடைய மக்களின் அநேக தவறுகள் அவர்களுடைய நாவுகளால் உண்டாகின்றன.

"இபாதத் (வழிபாட்டில்) மிகவும் எளிதானது மவுனம் கொண்ட நாவும், நற்குணமும் ஆகும்."

"நீ நல்லதையே பேசு, இல்லையேல் மவுனமாக இரு."

"யார் வாய்மூடிவிட்டாரோ அவர் ஈடேற்றம் பெற்றுவிட்டார். வயிறு, வெட்க உறுப்பு, நாவு இவற்றின் தீங்கை விட்டும் காக்கப்பட்டவர் எவரோ அவர் முழுவதும் காக்கப்பட்டவர் ஆகிறார்."

"எவன் அதிகம் பேசுவானோ, அவன் அதிகம் தவறு உள்ளவனாக இருப்பான். எவன் தவறுகள் உள்ளவனாக இருப்பானோ, அவன் அதிகம் பாவம் உள்ளவனாக இருப்பான். அவனுக்கு நரகம் மேலானதாகும்."

Tuesday, September 28, 2010

ராபியத்துல் பஸ்ரியா துஆ கேட்ட விதம்.


"எனது இறைவா!இம்மையில் நீ எனக்கு அளிக்க விரும்பும் கருணைகளை நீ உன் நேசர்களுக்கு வழங்குவாயாக!
எனக்கு நீயே போதுமானவன்.இறைவா!இம்மையிலும்,மறுமையிலும் அனைத்துக்கும் மேலாக நான் உன்னையே நேசிக்க விரும்புகின்றேன்.மற்றயாவும் விடுத்து உன்னையே சந்திக்க விரும்புகின்றேன்.
இறைவா!நான் நரகவேதனை விட்டும் நீங்குவதற்காக நான் உன்னை வணங்கினேயானால் என் தங்கும் இடம் நரகமாகட்டும்.நான் மரித்தபின் என்னை நரகத்தில் விட்டு அந்த நரகம் முழுதும் நிரம்பும் படியாக என் உடம்பை பெரிதாக்கி மற்ற எவரையும் நரகில் போட இயலாதாவாறு ஆக்குவாயாக!
இறைவா!சுவர்க்கத்தின் இன்பத்தினை அடையும் பொருட்டு நான் வணங்கினேயானால் எனக்கு அந்த சுவர்க்க வாசல் அடைபடட்டும்.
இறைவா!உன்னையே அடைய நான் வணங்கினேயானால் உனது அழிவற்ற தரிசனத்தை விட்டும் என்னை விட்டுவிடாதே"

சுப்ஹானல்லாஹ்.வரலாறு போற்றும் அந்த பக்திமான் ,உயர்ந்த பெண்மணி இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் கூட சுக வாழ்வை நாடாமல் அவர்கள் இறைவனை அடையும் அவாவை எண்ணும் பொழுது நம் கல்பு சிலிர்க்கின்றது.

Friday, September 24, 2010

வரலாற்றில் ஒரு பொன்னேடு

ஒரு நாள் அப்பாஸிய கலீஃபா ஹாரூன் ரஸீத் தம் நண்பர் ஒருவருடன் உணவு உண்டு கொண்டிருந்தார்.அப்பொழுது உணவுப்பொருட்கள் சிதறி விரிப்பில் விழுந்தன.நண்பர் அந்த உணவுப்பொருட்களை எடுத்து உண்ணலானார்.கலீஃபா ஹாரூன் ரஸீதுக்கு இது அறுவெறுப்பாகத்தோன்றியது.

நண்பரை ஏறிட்டுப்பார்த்தார்.எதற்காக கலீஃபா தம்மை ஏறிடுகின்றார் என்பதைனை உணர்ந்து கொண்ட நண்பர் இவ்விதம் கூறினார்.

"அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இப்படி சிதறி விழும் உணவுகளை எடுத்து அருந்துபவர்களுக்கு உணவின் பெருக்கம் - பரக்கத் எப்பொழுதும் இருக்கும்"என்று பகன்றதை கலீஃபாவுக்கு எடுத்துச்சொன்னார்கள்.

அதனை கேட்ட கலீஃபா "இது எனக்குத்தெரியாதே.இதனை நீங்கள் நான் அறியத்தந்தமைக்காக என் அன்புப்பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள்"என்று ஒர் உயரிய மணி மாலையை பரிசளித்தார்.

அதனைப்பெற்ருக்கொண்ட நண்பர்"பார்த்தீர்களா?இப்பொழுதுதான் சிதறிவிழுந்த உணவுப்பொருளை எடுத்து அருந்தினேன்.உடனே எனக்கு பரக்கத் கிடைத்து விட்டது"என்றார்.

அல்லாஹ்வின் ரசூலின் வாக்கு எத்தனை சத்தியமானது என்பதனை உணர்ந்த நண்பர்கள் இருவரும் சிலாகித்து மகிழ்ந்தனர்.

Wednesday, September 22, 2010

நபிமொழி



ஏழு வகை மக்களுக்கு அல்லாஹ் மறுமையில் தன் நிழலில் இடம் அளிப்பான்.
1.நீதியுள்ள தலைவன்
2.வணக்கத்தில் மூழ்கிய இளைஞர்.
3.ஜமாஅத்காக மசூதி செல்பவர்.
4.அல்லாஹ்வுக்காக நட்பு கொள்பவர்.
5.விபச்சாரம் புரிய மறுக்கும் பெண்.
6.இடக்கைக்கு தெரியாமல் வலக்கையால் தர்மம் கொடுப்பவர்.
7.தனிமையில் இறைபக்தியில் மூழ்கி கண்ணீர் வடிப்பவர்.

அ:அபூ ஹுரைரா
ஆ:புகாரி,முஸ்லிம்,திர்மிதி,நஸாயீ

நபிமார்களின் வழிமுறைகள் நாண்கு.
1.நாணமுறுவது
2.நறுமணம் பூசுவது.
3.பல்துலக்குவது
4.மணம் புரிவது.

அ:அபூ ஐயூப்(ரலி)
ஆ:திர்மிதி

ஏழு செயல்கள் ஏற்படுமுன் நீங்கள் நற் செயலில் ஈடு பட்டு விடுங்கள்.
1.இறை நன்றியை மறக்கடித்து விடும் ஏழ்மை.
2.அநியாத்திற்கு உதவும் செல்வம்.
3.உடல் நலத்தைக்கெடுக்கும் நோய்
4.முதுமையில் ஏற்படும் இயலாமை
5.எதிர்பாராமல் ஏற்படும் இறப்பு.
6.தஜ்ஜாலின் வருகை
7.திடுக்கம் அளிக்கவல்ல மறுமை.

அ:அபூ ஹுரைரா
ஆ:முஸ்லிம்

நாண்கு விஷயங்களை நம்பாதவன் உண்மை விசுவாசி அல்ல
1.தையிப் கலிமாவை உறுதி பேணல்
2.இறப்பை நம்புதல்
3மறுமையை நம்புதல்
4.விதியை நம்புதல்

அ:அலி (ரலி)
ஆ:திர்மிதி

இறை நம்பிக்கையாளர்களிடம் இருக்காத இரு செயல்கள்
1.உலோபத்தனம்
2.கஞ்சத்தனம்

அ:அபூ ஸயீதில் குத்ரிய்யீ
ஆ:திர்மிதி

அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளை இட்ட 10 விஷயங்கள்.
1.மறைவாகவும்,வெளிப்படையாகவும் இறைவனுக்கு அஞ்சுதல்
2.சினத்திலும்,திருப்தியிலும் நீதத்தை கடை பிடித்தல்.
3.ஏழ்மையிலும்,செல்வத்திலும் நடுநிலையாக இருத்தல்
4.உறவை அறுத்துக்கொள்பவருடன் வலிய சென்று உறவாடுதல்
5.யாதும் அளிக்காதவருக்கும் சன்மானம் அளித்தல்
6.அநீதி இழைத்தவரை மன்னித்தல்.
7.மவுனம்(சிந்திப்பதாகவும்)
8.பேச்சு(தியானமாகவும்,
9பார்வை(அறிவு பெறுவதாகவும்)
10.நன்மையைக்கொண்டு ஏவுதல்

அ:அபூ ஹுரைரா
ஆ:ரஜீன்

Tuesday, September 21, 2010

இஸ்லாம்,இறைதூதர் பற்றி அறிஞர்கள்:




இறைவன் ஒருவன் தான் என்பதனை எள்ளளவும் குழப்பமின்றி உறுதியாக ஊர்ஜிதப்படுத்தியது இஸ்லாத்தின் முதற்பணி.மக்களிடையே சகோதரத்துவத்தை வாழ்க்கையில் நடத்திக்காட்டியது இஸ்லாத்தின் இரண்டாவது பணி.
-மகாத்மா காந்தி

தத்துவக்காட்டில் சிக்கித்தடுமாறிக்கொண்டிருக்கும் உலகுக்கு தக்கதோர் வழிகாட்டும் ஒளி விளக்காக நாங்கள் இஸ்லாத்தை கருதுகின்றோம்.
-அறிஞர் அண்ணா

ஒளிவிடும் வைரத்திற்கு ஒப்பாகவே நாயகம்(சல்)அவர்களின் கருத்துரைகள் உள்ளன.வைரத்தை உயர்ந்த அணிகலணாகவும் பவிக்கலாம்.அதை விற்று குதிரை பந்தயத்திற்கும் போகலாம்.அதை தவறாக பயன் படுத்தி அழிவையும் தேடலாம்.அது போலவே மார்க்கத்தைப்பயன் படுத்துவதைப்பொறுத்தே அதன் மாண்பு இருக்கின்றது.
-அறிஞர் அண்ணா.

இஸ்லாத்திற்கு நன்மை அன்பு என்ற ஆயுதத்தினாலேயே கிடைக்க முடியுமே தவிர கொடுங்கோன்மை என்னும் வாளினால் அல்ல.
-பாபர்

எல்லா தீர்க்கதரிசிகளையும்,மதத்தலைவர்களையும் விட மகத்தான வெற்றி பெற்ற மனிதர் முஹம்மத்(ஸல்)
-என்ஸைக்ளோபீடியா பிரிட்டாணிகா

முஹம்மத் தன் சொந்த வாழ்வில் சுமூக தன்மையும்,விசுவாசமும்,குடுமப்த்தின் பால் பரிவும்,மன்னிக்கும் குணமும் உடையவராக இருந்தார்.அவர் அதிகாரத்தின் உச்ச நிலையில் இருக்கும் போது கூட மிக எளிய வாழ்வை மேற்கொண்டார்.
-சேம்பர்ஸ் என்ஸைக்ளோபீடியா

ஒரு மனிதரின் வார்த்தைக்கு மக்கள் அளிக்கும் மதிப்பில்த்தான் அவருடைய பெருமை எல்லாம் அடங்கி இருப்பதென்றால் இந்த வகையில் உலகில் தோன்றிய மனிதருள் முஹம்மத்(ஸல்) மிக உயர்ந்தவர்.
-லண்டன் 'டெய்லி எக்ஸ்பிரஸ்'

Sunday, September 19, 2010

ராபியத்துல் பஸ்ரியா(ரஹ்) வின் இபாதத்



பஸ்ரா நகரைச்சேர்ந்த ராபியத்துல் பஸ்ரியா என்ற இறைபக்தி மிக்க பெண்மணி .இவர் கனவிலும்,நனவிலும் ஹக்கனைப்பற்றிய சிந்தனையில் மட்டும் காலம் கழித்த முஹாஜிர்.ஒரு நாள் இவரிடம் மற்று மொரு இறைநேசசெல்வரான ஹஸன் பஸ்ரி(ரஹ்) என்பவர் சந்தித்தார்.ஆன்மீக நெறி பற்றி இரு இறைநேசர்களும் அளவளாவினார்கள்.

பேச்சினூடே"பஸ்ரியா,நீ சைத்தானை விரும்புகின்றாயா?"என்று கேட்டார்.
"இல்லை"என்றார் பஸ்ரியா.
"நீ சைத்தானை வெறுக்கின்றாயா?" என்று ஹஸன் பஸ்ரி கேட்ட கேள்விக்கும் "இல்லை"என்ற பதிலையே அளித்தார் பஸ்ரியா.

"விரும்பவும் இல்லை,வெறுக்கவும் இல்லை.என்ன இது முன்னுக்கு பின் முரணாக இருக்கின்றது உனது பதில்?விளக்கமாக சொல்"என்றார் ஹசன் பஸ்ரி.

"அல்லாஹ்வின் அன்பரே!என்னுள்ளம் இறைவன் வாழும் இல்லம்.அவ்வில்லம் முழுவதும் அல்லாஹ் மட்டுமே நிறைந்து இருக்கின்றான்.ஒரு சின்னஞ்சிறு இடைவெளி இன்றி அகம் முழுதும் அல்லாஹ் ஒருவனே என் அகத்தை ஆட்சி புரிகின்றான்.அப்படி இருக்க சைத்தானை விரும்பவோ,வெறுக்கவோ என் மனதில் எங்கே இடம் உள்ளது?"
பஸ்ரியாவின் பதில் கேட்டு மலைத்து நின்றார் ஹசன் பஸ்ரி(ரஹ்) அவர்கள்.

இறைநேச செல்வியான ராபியத்துல் பஸ்ரியா பஸ்ரியாவின் இறைபக்தியின் சிறப்புகளை,அவரது வாழ்க்கை வரலாறை இனி வரும் இடுகைகளில் பார்ப்போம்

Saturday, September 18, 2010

எழிலரசர் யூசுப் (அலை)

யூசுப் (அலை)அவர்களை 18 திர்ஹங்களுக்கு மாலிக் என்பவரிடம் யூசுப் (அலை) அவர்களின் சகோதரர்கள் விற்றதும் ,மாலிக், யூசுப் (அலை) அவர்களை ஏலம் விட்டார்.எழிலரசர் யூசுப் (அலை)அ வர்களின் அழகுத்திருவதனம் கண்ட மக்களில் பெரிய பெரிய செல்வந்தர்கள் அவரை விலைக்கு வாங்கி தனதாக்கிக்கொள்ள துடித்தனர்.ஏலம் நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு கூன் கிழவி கம்பூண்றிக்கொண்டு வந்து ,தள்ளாடியவாறே தாம் நூற்ற நூல்கற்றைககளைக்காட்டி"தம்பிகளா!இந்த நூல் கற்றைகளை எடுத்துக்கொண்டு இப்பேரெழிலரசரை தாரும்!" என்று இயம்பினாள்.

அதனைக்கேட்ட சுற்றி இருந்தவர்கள் ஏளனமாக நகைத்தனர்"கிழவியே!எழில் உருவான யூசுபை தனதாக்கிக்கொள்ள செல்வந்தர்களே தம் பணபலத்தால் கடும் போட்டி போட்டு வருகின்றனர். இந்நூல்கண்டுக்கு இவர் கிடைப்பாரா?"என்று வினவினார்கள்.

அதனை செவியுற்ற கிழவி"இந்நூல்கண்டுகளுக்கு இவரது கால்தூசுகூட பெறாது என்பது எனக்குத்தெரியும்.வரலாற்றில் இப்பெரும் எழிலரசரை விலைக்கு கேட்டு வந்தேன் என்று பதியப்படவேண்டும்.அந்த புண்ணியமாவது எனக்கு கிடைக்கட்டும்" என்று இயம்பினாள்.

நபி யூசுப் (அலை) அவர்களின் பேரெழிலை புகழ்ந்த பாடப்பட்ட கவி:

இன்னனமே செந்நிறத்துச்
செம்மல் இவர் போழ்தில்

மன்னவனோ விண்ணவனோ
என்று பலர் மயங்க

மன்னவனே மண்ணதனை
ஆள்வதற்கே வந்த

மன் பெரிய மன்னவனே
என்று பலர் சொல்வர்

இன்னவரை ஈன்றெடுக்க
இருவருமே என்ன

பன்னரிய பெருந்தவமே
பண்ணினரோ என்பர்

அன்று;அன்று;இவர் மணக்கும்
அழகரசி எவளோ

அண்ணவளே அருந்தவமே
ஆற்றியவள் என்பர்

இன்னவனை மணந்திடற்கு
என்ன தவம் செய்வோம்

என்றெண்ணி ஏந்திழையார்
ஏங்கி,ஏங்கி நின்றர்

இன்னவனை போல ஒரு
எழில் மகனை பெறவே

என்ன தவம் செய்திடுவோம்
எனப்பலரும் நினைத்தர்

அளவற்ற அருளாளான்,நிகரற்ற அன்புடையோன்.


அர்ரஹ்மான் னிர்ரஹீம் - அளவற்ற அருளாளான்,நிகரற்ற அன்புடையோன்.

பல்க் நாட்டின் சிம்மாசனத்தில் ஆட்சி புரிந்துவந்த அரசர் இப்றாஹீம் பின் அத்ஹம் அவர்களின் ஞானப்பாதையில் ஓர் நாள்...

கடும்பசி,தாகத்தோடு ஒரு காட்டில் நடந்து வந்தனர்.களைத்த அரசர் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தனர்.தன் சட்டைப்பையிலிருந்த ஒரு காய்ந்து போன ரொட்டித்துண்டை எடுத்து புசிக்க ஆரம்பித்த வேலையில் எங்கிருந்தோ ஒரு காகம் வந்து ரொட்டியை பறித்துக்கொண்டு பறந்தது.

அத்ஹம் அக்காகத்தை தொடர்ந்து சென்றனர்.இறுதியாக அக்காகம் ஒரு மலையுச்சிக்கு சென்று அங்கிருந்த பாழடைந்த மண்டபத்தின் மேல் தளத்திற்கு சென்று அமர்ந்தது.காகத்தின் செயலை அறியும் நோக்கோடு அதையே குறிப்பாக கவனித்தனர்.

அக்காகம் ரொட்டித்துண்டுகளை காலில் வைத்து தன் அலகால் விண்டு விண்டு கீழே போட்டது.இதனைக்கண்ட அத்ஹம் 'இது என்ன விநோதக்காட்சி?இக்காகம் ரொட்டியை சாப்பிடாமல் கீழே போடுகின்றது?' என்று ஆச்சரியப்பட்ட அரசர் அந்த மண்டபத்தினுள் நுழைந்தனர்.அங்கே அவர் கண்ட காட்சி....

மண்டபத்தினுள் நலிந்து மெலிந்து போன ஒரு மனிதர் கை கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் இருந்தார்.அவர் அந்நிலையில் இருந்தவாறே மேல் நோக்கி வாயைப்பிளக்க அக்காகம் ரொட்டித்துண்டங்களை ஒவ்வொன்றாக அவரது வாய்க்கு நேராக போட அதனை அம்மனிதர் மென்று சாப்பிட்டார்.பிறகு எங்கிருந்தோ அந்த காகம் ஒரு கொட்டாங்கச்சியில் நீரை முகர்ந்து எடுத்து வந்து அதே போல் அவரது வாய்க்கு நேராக ஊற்ற அம்மனிதர் அதனை பருகினார்.

அந்த விந்தை நிகழ்சியால் நெகிழ்ந்து நின்ற அத்ஹம் அம்மனிதரை நெருங்கி கட்டுக்களை அவிழ்த்து"நீங்கள் யார்?இந்த மண்டபத்தினுள் எப்படி வந்தீர்கள்?" என்று வினவினர்.

"நான் ஒரு வியாபாரி.வியாபாரத்தை முடித்து விட்டு பெரும் பொருளுடன் எங்களூருக்கு இக்காட்டினை கடந்து வந்த பொழுது திருடர்கள் என் பொருளையும்,குதிரையையும் பறித்துக்கொண்டு என்னை சங்கிலியால் கட்டிவைத்து விட்டு சென்றுவிட்டனர்.நான் இப்படியே பல ஆண்டுகளாக இருந்து வருகின்றேன்.இது நாள் வரை இக்காகம் தான் எனக்கு இப்படி ஏதாகிலும் உணவை தவறாது கொண்டுவந்து கொடுக்கும்"என்றார்.

இதனைக்கேட்ட அத்ஹம் மட்டில்லா விநோதம் கொண்டார்."இறைவன் எத்தனை பெரும் அருளாளான்.நான் திக்குத்தெரியாத இக்காட்டில் தணியாத தாகத்தோடு தனித்து இருந்த பொழுது உண்ண உணவின்றி பசிக்கொடுமையால் உடல் சோர்ந்த நிலையில் ஒரு மரத்தடியில் அமர்ந்தேன்.அப்பொழுது என் உள்ளம் "ஓ..இப்றாஹீம் பின் அத்ஹம் என்ற அரசரே!உன் பதவி என்ன?பட்டமென்ன?சுகபோகமென்ன?அத்தனையும் துறந்து விட்டு ஆனந்த வாழ்வை இழந்து விட்டு இந்த திக்கு தெரியாத கானகத்தில் இப்படி எல்லாம் இன்னல் படுகின்றாயே?இங்கே யார் உன்னை கவனிப்பார்கள்?"என்ற எண்ணம் எழுந்து என்னை ஏங்க வைத்தது.இத்தகைய மனப்போராட்டத்துடன் என்னிடம் இருந்த ஒரே ஒரு ரொட்டித்துண்டை புசிக்க முற்பட்ட பொழுதுதான் இவை அத்தனை விநோதங்களும் நடந்தன."என்று கூறி அத்தனையையும் அம்மனிதரிடம் விளக்கினார்.

மேலும் கூறினார்."இறைவன்,என் இதயத்திற்கு நேரிய தெளிவான பதிலை சீரிய முறையில் நயம் பட விளக்கி உள்ளான் .அனைத்துயிரையும் படைத்துக்காக்கும் அருளாளன் எந்த உயிருக்கும் எந்த நேரத்திலும்,எந்த வகையிலாவது இரணம் அளிப்பான்."என்று கூறிய இப்றாஹீம்பின் அத்ஹம் இறைவனின் அருளை எண்ணி மெய்சிலிர்த்தார்.

எதற்கும் சக்தியற்று, உழைக்க வசதியற்ற வக்கற்றவர்களாக தாயின் வயிற்றில் இருந்து பிறந்தோம்! வாழ்க்கையைக் கொடுத்தான்! வசதிவாய்ப்புகளைக் கொடுத்தான் தாயைக் கொடுத்தான், வாழ்க்கைத்துணையை கொடுத்தான் பிள்ளைச் செல்வத்தை கொடுத்தான், நம்மை நேர்வழிப்படுத்த அருள்மறைக் குர்ஆனையும் நல்வழிப்படுத்த அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளான ஹதீதுகளையும் நமக்கு இலவசமாக அருளினானே இந்த அன்பிற்கு நிகராக வேறு ஏதாவது அன்பு உள்ளதா? இந்த அருளுக்கு நிகரான அருள் உலகில் ஏதாவது உள்ளதா? சிந்தித்துப்பார்ப்போம். அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் உணர்ந்து அவனுக்கு அஞ்சிவாழும் மூமின்களாக உறுதியுடன் இருப்போம்! நம் அனைவர் மீதும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!

Sunday, August 29, 2010

முத்துக்கள் மும்மூன்று.



1.அல்லாஹ்வின் தூதுவர்கள் மூவர்

1.மார்க்க யுத்தம் செய்பவர்
2.ஹஜ்ஜுக்கு செல்பவர்
3.உம்ரா செல்பவர்.

அ:அபுஹுரைரா(ரலி)
ஆ:நஸாயீ


2.அல்லாஹ்வின் பொறுப்பில் இருப்பவர் மூவர்

1.அல்லாஹ்வின் வழியில் போர் செய்பவர்
2பள்ளிவாசலுக்கு செல்பவர்
3.தன் வீட்டிற்கு அமைதி நாடி செலபவர்.

அ:அபு உமாமா
ஆ:அபூதாவூத்

3.மூவித நற்செயல்கள் எவரில் குடி உள்ளதோ அவர் மீது அல்லாஹ் தன் அடைக்கல ப்போர்வையை போர்த்தி அவரை சுவனபதியில் சேர்க்கின்றான்.

1.இயலாதோருக்கு உதவுதல்
2.பெற்றோர் மீது அன்பு கொள்ளுதல்
3.அடிமைக்கு உதவுதல்.

அ:ஜாபிர் (ரல்)
ஆ"முஸ்லிம்

4.அல்லாஹ் நேசம் கொள்ளும் மூவர்.

1.மறைவாக தானம் அளிப்பவர்
2நிறைவாக இறைமறை ஓதுபவர்
3.அஞ்சா நெஞ்சத்துடன் மார்க்கப்போர் புரிபவர்.

அ:அபுசர்
ஆ:திர்மிதி

5.அல்லாஹ் சினம் கொள்ளும் மூவர்

1.விபச்சாரம் செய்பவர்
2.பெருமைபாராட்டும் ஏழை
3.அநியாயம் செய்யும் செல்வந்தர்

அ:அபுசர்
ஆ:திர்மிதி

6.மனிதன் இறந்து விட்டாலும் முடிவுறாத மூன்று செயல்கள்

  1. நிலையான தர்மம் ... உதா: குளம் வெட்டுதல் , கிணறு வெட்டுதல் , நிழல தரும் , மற்றும் கனி தரும் மரம் நடுதல்(( ஊர் பொதுவாக உபயோகிக்க))
  2. நேர்மையான கற்று பிறருக்கும் கற்பித்த கல்வி.
  3. சாலிஹான பிள்ளைகள்.. (( தன் தாய் தந்தைக்காக துவா செய்யும் பிள்ளை))
அ:அலி(ரலி)
ஆ:திர்மிதி


7.மூன்றுவித மனிதருடன் மறுமையில் இறைவன் உரையாட மாட்டான்.

1.விபச்சாரம் புரிபவர்
2.பொய் கூறும் அதிகாரி
3.சக்தி இருந்தும் உழைக்காத குடும்பஸ்தன்
அ:அபூஹுரைரா

ஆமுஸ்லிம்,நசாயீ

8.மூன்றுவித மனிதர்களை இறைவன் மறுமையில் நோக்க மாட்டான்

1.பெற்றோருக்கு மாறு செய்பவன்
2.ஆண் ஆடை அணியும் பெண்
3.ரோஷம்,சுரணை அற்றவன்.

அ:இபுனு உமர்
ஆ:நஸாயீ

9.மூன்று வித மனிதர்கள் மறுமையில் நாயகத்தின் விரோதிகள்.

1.மோசம் செய்பவன்
2.சுதந்திரமுள்ள மனிதனை விற்று அதனை உண்பவன்.
3.வேலைக்குறிய கூலியை பணியாளுக்கு அளிக்காதவன்.

அ:முகீரா(ரலி)
ஆ:புகாரி

10.இறைவன் அறுவெறுப்படையும் மூவித செயல்கள்.

1.பயனற்ற பேச்சு பேசுதல்
2.பணத்தை வீண் விரயமாக்குதல்
3.அதிகமாக பொருட்களை கேட்குதல்

அ:முகீரா(ரலி)
ஆ:புகாரி