Showing posts with label உம்மு ஹபீபா(ரலி). Show all posts
Showing posts with label உம்மு ஹபீபா(ரலி). Show all posts

Wednesday, January 11, 2012

அன்னை உம்மு ஹபீபா(ரலி)



அன்னை உம்மு ஹபீபா பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவி ஆகி மதினாவில் வசித்த பொழுது அவரது தந்தை அபு சுப்யான் அவரைக்காண வந்திருந்தார்.சுப்யான் இஸ்லாத்திற்கு மாறு பட்டவர்.உம்மு ஹபீபாவின் குடிலில் ஒரு ஜமக்காளம் விரித்து இருந்ததின் மீது சுப்யான் அமர யத்தனித்த பொழுது உம்மு ஹபீபா அதனை அவசர அவசரமாக சுருட்டி வைத்து விட்டு தந்தை அமர ஒரு பாயை கொணர்ந்து போட்டார்.

இதனைக்கண்ட சுப்யான் கோபத்துடன் “மகளே,இந்த ஜமக்காளம் நான் இருக்க தகுதி அற்றதா?அல்லது நான் இதில் அமர தகுதி அற்றவனா?அதனை ஏன் சுருட்டி வைத்து விட்டாய்?:”என்று வினவினார்.

அதற்கு உம்மு ஹபீபா “அது பெருமானார் (ஸல்) அவர்கள் பரிசுத்த திருமேனி அமரும் விரிப்பு.ஆதலால் நிராகரிப்பாவரான அபு சுப்யான் அமர தகுதி அற்றது”என்று தன் தந்தையைப்பார்த்துக்கூறினார்.

Sunday, November 7, 2010

3 நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கலாகாது.


உம்முஹாத்துல் முஃமினீன் அன்னை உம்மு ஹபீபா(ரலி)அவர்களின் தந்தை அபு சுப்யான் மரணமடைந்த மூன்றாம் நாள் உம்முஹபீபா(ரலி)அவர்கள் நறுமணத்தை வரவழைத்துப்பூசிக்கொண்டார்கள்.தந்தை இறந்த மூன்றாம் நாளே நறுமணம் பூசி சந்தோஷம் சந்தோஷம் கொண்டாடுகின்றாரே என்று அதனைக்கண்டவர்களுக்கு எல்லாம் வியப்பு.காரணம் கேட்ட பொழுது இவ்வாறு விளக்கம் கூறினார்கள்
"எனக்கு நறுமணம் பூசிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் நான் நறுமணத்தை பூசிக்கொள்ள வில்லை.ஒரு பெண்ணுக்கு தன் கணவன் தவிர வேறு எவருக்காகவும் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்க அனுமதி இல்லை என்ற நாயக வாக்கை மெய்பிப்பதற்காக அதனை அனுசரித்து நான் நறுமணம் பூசி,மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கவில்லை என்று காட்ட இவ்வாறு செய்தேன்"என்று கூறினர்.