
புரவி மீது இவர்ந்து வந்து யாசிப்போருக்கும் தானம் அளியுங்கள்.
அ:அதிபிப்னு ஹாதிம்
ஆ:புகாரி,முஸ்லிம் நஸாயீ
தம்முடைய அவசியத்தேவைகளில் இருந்து மீதமுள்ளதை தர்மம் செய்வதும்,தன் குடும்பத்தாரில் இருந்து தர்மம் செய்யத்துவங்குவதும் மேலான தர்மம் ஆகும்.
அ:அபூ ஹுரைரா
ஆ:புகாரி,அபூதாவுத்,நஸாயீ
தர்மம் செய்தவர் தன் செய்த தர்மத்தை திரும்ப பெறுவாராயின் வாந்தி எடுத்ததை மீண்டும் உண்பதற்கு நிகராவார்.
அ:உமர் (ரலி)
ஆ:புகாரி,முஸ்லிம் நஸாயீ,முஅத்தா,திர்மிதி
அறம் செய்தல் இறைவனது சினத்தை தணிய வைத்து தீய இறப்பை விட்டும் மனிதனை காக்கின்றது.
அ:அபூ ஹுரைரா
ஆ:திர்மிதி
"ஒரு லட்சம் பொன் நாணயத்தை விட ஒரே ஒரு பொன் நாணயம் உயர்வானதாகி விட்டது"நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன பொழுது "நாயகமே!அது எங்ஙனம் "என்று வினவப்பட்டது.
"ஒரு மனிதரிடம் இரண்டே பொன் நாணயங்கள் இருந்தன.அவற்றில் இருந்து நல்லவற்றை தேர்ந்தெடுத்து தானம் செய்து விட்டார்.மற்றொரு செல்வந்தர் தன் கருவூலத்தில் இருந்து ஒரு லட்சம் பொன் நாணயங்களை எடுத்து தானம் செய்து விட்டார்.முந்தியவர் தானம் செய்த நல்ல ஒரு பொன் நாணயம் ,பிந்தியவருடைய ஒரு லட்சம் பொன் நாணயத்தை விட சிறந்ததாகி விட்டது.ஏனெனில் முன்னவர் தன் பொருளில் இருந்து பாதியில் நல்லவற்றை அளித்தார்.பின்னவர் தன் கருவூலத்தில் இருந்து ஒரு சிறு பாகத்தினை அளித்தார்"என மறு மொழி பகர்ந்தார்கள்.
அ:அபூ ஹுரைரா
ஆ:திர்மிதி







