Showing posts with label அறிந்து கொள்வோம். Show all posts
Showing posts with label அறிந்து கொள்வோம். Show all posts

Wednesday, July 7, 2010

சிரிப்பு எத்தனை வகை



ஓயாமல் சிரிப்பவன் பைத்தியகாரன்
ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி
இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்

கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்

மோகத்தில் சிரிப்பவன் வெறியன்
மகிமையில் சிரிப்பவன் மன்னன்

தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி
தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி
நிலை கண்டு சிரிப்பவன் காரியவாதி

கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்
கொடுக்கும் பொழுது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்

மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்
வெற்றியில் சிரிப்பவன் வீரன்

விளையாமல் சிரிப்பவன் வீணன்
தற்பெருமையால் சிரிப்பவன் கோழை

அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி
அன்பால் சிரிப்பவள் அன்னை

காதலால் சிரிப்பவள் மனைவி
நிலை மறந்து சிரிப்பவள் காதலி

நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்
நினைவோடு சிரிப்பவன் அறிவாளி

குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி
கும்மி அடித்து சிரிப்பவன் இதய கசடுள்ளவன்

அகம் மகிழ்ந்து சிரிப்பவன் உண்மை நண்பன்
துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.

படித்ததில் பதிந்தவை

Tuesday, July 6, 2010

வாழ்க்கைக் கணக்கு


நல்லவற்றைக் கூட்டிகொள்+

தீயவற்றை கழித்துக்கொள் -

அறிவைப்பெருக்கிக்கொள் *

நேரத்தை வகுத்துக்கொள் /

வளர் பிறை போல் அறிவை வளர் <

செலவைக்குறை அறிவைப் பெருக்கு >

அன்பை பெருக்கு ஆணவத்தைக்குறை

நல்லவர்களுடன் இணையாய் இரு

பிறரை நம்பி வாழும் வாழ்வு சுகமற்றது

வீண் சந்தேகம் தவிர் ?

கெட்ட நண்பர்களுக்கு முற்றுப்புள்ளி வை .

நல்ல பெயரை சேர்த்துக்கொள் @

அனைவருக்கும் வினோதம் ஆகி விடாதே !

நற் செயலுக்கு கமா போடு ,

Wednesday, June 30, 2010

(20) இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு.

இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு.

மூஸா நபி (அலை)அவர்களிடம் இறைவன் "ஓ மூஸாவே!நீர் எனக்காக என்னென்ன நற்கிரியைகள் செய்தீர்கள்?" என வினவினான்.

அதற்கு மூஸா(அலை) அவர்கள் "இறைவா!நான் உனக்காகவே நோன்பு நோற்றேன்.தொழுதேன்.திக்று செய்தேன்.தஸ்பீஹ் செய்கிறேன்.நீ எனக்களித்த கடமைகளை நிறைவேற்றினேன்"என்றார்கள்.

அதற்கு இறைவன்"ஓ..மூஸாவே...ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை விரைவில் கடந்து செல்வதற்காக தொழுதீர்.நரகைவிட்டு உம்மை பாதுகாத்துக்கொள்ள நோன்பு நோற்றீர்.உமக்கு சொர்க்கத்தில் பதவி உயர்த்தப்படுவதற்காக தஸ்பீஹ் செய்தீர். உமக்கிடப்பட்ட கடமைகள் நிறை வேற்ற வேண்டும் என்பதற்காக இவை அனைத்தையும் செய்தீர்.இவை யாவும் உமக்காக செய்து வந்த கடமைகள்.எனினும் எனக்காக ஏதேனும் நற்கரியைகள்செய்தீரா?" என்று கேட்டான்.

அப்படிப்பட்ட இறைவனுக்கு ஆற்ற வேண்டிய நற்கிரியைகள் எதுவென மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ் இடத்தில் கேட்டபொழுது இறைவன் ஆறு கடமைகளை இயம்பினான்.

1.ஓ..மூஸாவே!பசித்தோருக்கு உணவளித்து பசியை ஆற்றுவீராக!

2.ஓ..மூஸாவே!தாகித்தோருக்கு நீரளித்து தாகத்தை நீக்குவீராக!

3.ஓ..மூஸாவே!உமது ஒவ்வொருபேச்சையும்,செயலையும் முகஸ்துதியைவிட்டும் பாதுகாத்துக்கொள்வீராக!

4..ஓ..மூஸாவே! அபயம் தேடுவோருக்கு அபயம் அளிப்பீராக!

5..ஓ..மூஸாவே!அநீதத்துகுள்ளானவர்களுக்கு ஆதரவு அளிப்பீர்களாக!

6..ஓ..மூஸாவே!அறிஞர்கள்(ஆலிம்)களுக்கு சங்கை செய்வீர்களாக!

இவ்வாறு இறைவன் இயம்பியதாக ரசூல் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

Monday, June 28, 2010

(17) அறிந்து கொள்ளுங்கள்

அறிந்து கொள்ளுங்கள்.

உலகில் இமைக்கும் நேரம் கூட அல்லாஹ்விற்கு மாறு செய்யாதவர்கள்.

1.அலி இப்னு அபிதாலிப்

2.ஸூரா யாஸீனில் வரும் ஹபீப் இப்னு நஜ்ஜார்

3.மூஸா (அலை)அவர்களை இறைத்தூதர் என ஏற்று இறை நம்பிக்கை கொண்ட கிஜுபீலு எனும் தச்சர்.


மலக்குல் மவுத்:

ரஜப் மாதம் முதல் நாள் செவ்வாய்க்கிழமை அன்று இறைவனால் இஸ்ராயீல் அவர்களுக்கு "மலக்குல் மவுத்" என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

ஆதம் (அலை)

ஆதம் (அலை)அவர்களை உயிர்ப்பித்து முதல் மாமனிதராக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட நாள் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் வெள்ளிக்கிழமை ஆகும்.

வானவர்களுக்கு இறைவன் வழங்கிய பட்டம்:

1.ஜிப்ரீல்(அலை) அவர்களுக்கு நபிமார்களுக்கு புனித செய்திகளை எடுத்து செல்லும் புனித தூதுவர் பட்டம்.

2.மீக்காயீல் (அலை) அவர்களுக்கு இரணத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டது.

3.இஸ்ராஃபீல்(அலை) அவர்களுக்கு உலக முடிவு நாளில் "சூர்" ஊதும் பொறுப்பு.

4.இஸ்ராயீல்(அலை) அவர்களுக்கு நண்பர்களை நண்பர்களோடு சேர்த்து வைக்கும் பொறுப்பு.

சிறப்பு மிக்கவை:

நாட்களில் சிறப்புடையது வெள்ளிக்கிழமை.

மாதங்களில் சிறப்புடையது ரமலான் மாதம்.

மனிதர்களில் சிறப்புடைவர் ஆதம் (அலை)

நபிமார்களில் சிறப்புடையவர் ரஸூல் -( ஸல்)

வணக்கங்களில் சிறப்புடையது ஸலவாத்து.

திருக்குர் ஆனில் சிறப்புடையது சூரத்துல் கஃபு

படித்ததில் பதிந்தவை.




Sunday, June 27, 2010

(16) அனைத்திலும் சிறந்தவை!



1.அனைத்திலும் விட உள்ளத்திற்கு சாந்தி அளிப்பது இறைதியானத்தில் ஈடுபட்டுஇருப்பது.

2.அனைத்திலும் விட நிறைய அன்புக்குறியவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

3.அனைத்திலும் நல்ல உபதேசி மனசாட்சி.

4.அனைத்திலும் விட அருமருந்து நன்நம்பிக்கை

5.அனைத்திலும் விட கஷ்ட்டமானது கடன்.

6.அனைத்திலும் விட நற்பாக்கியம் நல்குவது ஆனந்தமும் ஆரோக்கியமும்.

7.அனைத்திலும் விட மிக நல்லது உள்ளதைக்கொண்டு திருப்திபடல்.

8.அனைவரிலும் பெரும் வீரர் கோபத்தை அடக்குபவர்.

9.அனைத்திலும் விட அழியாபெருஞ்செல்வம் கல்வி.

10.அனைத்திலும் அங்கீகரிக்கக்கூடாதது கோபம்.

11.அனைவரிலும் மோசக்காரன் நயவஞ்சகன்.

12.அனைத்திலும் விட அதி சக்தி வாய்ந்தது இன்சொல்

13.அனைவரிலும் அற்பமானவன் நன்றி மறப்பவன்.

14.அனைத்திலும் விட நல்ல பெயர் எடுப்பது கொடை.

15.அனைவரிலும் மடமையானவன் பிறருக்கு உபத்திரவன் கொடுப்பவன்.

16அனைவரிலும் கெட்டவன் புறம் பேசுபவன்.

17.அனைத்து புறம் பேசுபவர்களிலும் கெட்டவன் குழப்பம் விளைவிப்பவன்.

18.அனைவரிலும் பெரும் விரோதி பாசாங்கு செய்பவன்.

19.அனைவரிலும் மகாபாவி குர் ஆனையும்,ஹதீஸையும் மறுப்பவன்.

20.அனைத்திலும் விட மன்னிக்கமுடியாத குற்றம் இறைவனுக்கு இணை வைத்தல்.

நபிமொழி

Sunday, June 13, 2010

(12) ஸல் - ரலி - ரஹ் - அலை


ஸல் - ரலி - ரஹ் - அலை

ஸல் - ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்.
நாயகத்தின் திரு நாமத்திற்குப்பின்னால் புகழப்படுபவை.
பொருள்:நாயகம் அவர்கள் மீது அல்லாஹ் ஸலாவத்து சொல்வானாக!

ரலி - ரலியல்லாஹு அன்ஹு.
ஸஹாபாக்களின் பெயருக்குப்பின்னால் கூறப்படவேண்டும்.
பொருள்:அல்லாஹ் அவர்களிப்பொருந்திக்கொண்டான்.
ஒரு பெண் சஹாபி பெயருக்குப்பின் ரலியல்லாஹு அன்ஹா என்று கூறவேண்டும்
இரு ஆண்,பெண் ஸஹா(பி)பா பெயருக்குப்பின்னால் ரலியல்லாஹு அன்ஹுமா என்று கூறவேண்டும்.
இரண்டு ஸஹாபாக்கள் பெயருக்கு பின் ரலியல்லாஹு அன்ஹுன் என்று கூற வேண்டும்.
இரண்டுக்கும் அதிகமான பெண் சஹாபியாக்கள் பெயருக்குப்பின் ரலியல்லாஹு அன்ஹுன்ன என்று கூற வேண்டும்.

ரஹ் - ரஹ்மத்துல்லாஹி அலைஹி
இமாம்கள்,வலிமார்கள்,தாபியீன்கள்,அல்லாஹ்வின் நல்லடியார்கள்,பெயருக்குப்பின் கூறப்படுபவை.
மேற்கண்டவர்களின் பெண்களின் பெயருக்குப்பின் ரஹ்மத்துல்லாஹி அலைஹா என்று கூற வேண்டும்.
மேற்கண்டவர்களின் இரண்டு ஆண்,பெண்களுக்கு ரஹ்மதுல்லாஹி அலைஹிமா என்று கூற வேண்டும்.
இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு ரஹ்மதுல்லாஹி அலைஹிம்
இரண்டுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரஹ்மதுல்லாஹி அலைஹின்ன
இவ் உலகத்தை விட்டு மறைந்த இக்கால மார்க்க பெரியார்களை (ரஹ்) என்று கூறலாம்.

அலைஹி - அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்
நபியின் பெயருக்குபின் கூறப்படவேண்டும்.
பொருள்:அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக
இரண்டு நபிமார்கள் பெயருக்குப்பின் அலைஹி மஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்று கூறவேண்டும்.
இரண்டு நபி மார்களுக்கும் அதிகமானோர் பெயர்களுக்குப்பின் அலைஹி முஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்று கூற வேண்டும்.
ஆதாரம்:பிக்ஹின்

Saturday, June 12, 2010

(11) உத்தம ஸஹாபாக்கள்

அபூபக்கர் சித்தீக் (பெருமானார்(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா அவர்களின் தகப்பனார்.)

அபூ பக்ர் அல்(ஸ்)சித்திக் ( ரலி அன்ஹு )

உமர் ஹத்தாப் (பெருமானார்(ஸல்) அவர்களின் மனைவி ஹஃப்ஷா அவர்களின் தகப்பனார்)

உமர் பின் கத்தாப் ( ரலி அன்ஹு )
உஸ்மான்
உஸ்மான் ( ரலி அன்ஹு )
அலி (பெருமானார்(ஸல்) அவர்களின் மகள் பாத்திமா அவர்களின் கணவர்)
அலி பின் அபிதாலிப் (ரலி அன்ஹு)
தல்ஹா இபுனு உபைதுல்லாஹ்
தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி அன்ஹு)
ஜுபைரிபுனுல் அவாம்
ஜுபைர் பின் அவ்வாம் (ரலி அன்ஹு)
ஸஃப்து அபி வக்காஸ்
ஸஆத் பின் அபி வக்காஸ் (ரலி அன்ஹு)
ஸயீத் இபுனு ஜைத்
ஸயீத பின் ஜைத் (ரலி அன்ஹு)
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(செல்வந்தரான ஆனால் எளிமையான ஸஹாபி)
அப்துல் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி அன்ஹு)
அபூ உபைதுனுல் ஜர்ராஹ்
அபூ உபைத் பின் ஜர்ராஹ் (ரலி அன்ஹு)
அப்பாஸ் இபுனு அப்துல் முத்தலிப்
அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி அன்ஹு)
ஜஃபர் இப்னு அபிதாலிப்
ஜாஃபர் பின் அபிதாலிப் (ரலி அன்ஹு)
ஹஸன்(பெருமானாரின் (ஸல்)அருமைப்பேரர்)
ஹஸன் பின் அலி (ரலி அன்ஹு)
ஹுஸைன்(பெருமானாரின் (ஸல்)அருமைப்பேரர்)
ஹுஸைன் பின் அலி (ரலி அன்ஹு)
ஜைத் இபுனு ஹாரிஸா
ஜைத் பின் ஹாரிஸா (ரலி அன்ஹு)
உஸாமதுபுனு ஜைத்
உஸாமா பின் ஜைத் ( ஜாயித் ) (ரலி அன்ஹு)
அம்மார் இபுனு யாஸிர்
அம்மார் பின் யாஸிர் (ரலி அன்ஹு)
அப்துல்லாஹ் இபுனு மஸ்வூத்
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி அன்ஹு)
அபூஸர் கிஃபாரி
அபூ ஸர் அல்கிஃபாரி (ரலி அன்ஹு)
ஹுதைஃப் இபுனு யமானி
((இது சரியா தெரியல ))

ஸஃது இபுனு முஆத்
ஸஅத் பின் முஆத் (ரலி அன்ஹு)
அப்துல்லா இப்னு ஜுபைர்
அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி அன்ஹு)
அப்துல்லா இப்னு உமர்
அப்துல்லாஹ் பின் உமர் பின் கத்தாப் (ரலி அன்ஹு)
அப்துல்லாஹ் இபுன் அப்பாஸ்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி அன்ஹு)
பிலால் இபுனு ரிபாஹ்
பிலால் பின் ரிபாஹ் (ரலி அன்ஹு)
உமையுப் இபுனு கஃபு
உமைய்(யா ) பின் கஅ ப் (ரலி அன்ஹு)
அபு தல்ஹா அன்ஸாரி
அபூ தல்ஹா அன்ஸாரி (ரலி அன்ஹு)

ஸல்மான் பார்ஸி
ஸல்மான் ஃபார்ஸி (ரலி அன்ஹு)
அபு மூஸா அஸ் அரி
அபூ மூஸா அஸ் அரி (ரலி அன்ஹு)
அப்துல்லா இப்னு ஸலாம்
அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி அன்ஹு)
ஜகீர் இபுனு அப்துல்லா
ஜாகிர் பின் அப்துல்லாஹ் (ரலி அன்ஹு)
ஜாபிர் இபுனு அப்துல்லா
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி அன்ஹு)
அனஸ் இபுனு மாலிக்
அனஸ் பின் மாலிக் (ரலி அன்ஹு)
பராஃ இப்னு மாலிக்
பராஹ் பின் மாலிக் (ரலி அன்ஹு)
ஸாபித் இபுனு கைஸ்

ஸாபித் பின் கைஸ் (ரலி அன்ஹு)
அதிய் இபுனு ஹாதிம்
அதிய்யா பின் ஹாதிம் (ரலி அன்ஹு)
அபு ஹுரைரா
அபூ ஹுரைரா ( ரலி அன்ஹு )
ஜுலைபில்
((இது சரியா தெரியல ))
ஹாரி ஸதுபுனு ஸுராகா
ஹாரிஸா பின் ஸுராகா (ரலி அன்ஹு)
காலிதிபுனும் வலித்
காலித் பின் வலீத் (ரலி அன்ஹு)
அம்ருப்னு ஆஸ்
அம்ரு பின் ஆஸ் (ரலி அன்ஹு)
அபு ஸுப்யான் இப்னு ஹர்ப்
அபூ ஸுஃப்யான் பின் ஹார்ப் (ரலி அன்ஹு)
முஆவியா
மு ஆவியா (ரலி அன்ஹு )


பெண் ஸஹாபியாக்கள்:

பாத்திமா
உம்முல் மூமினீன் ஃபாத்திமா அல் ஜொஹ்ரா பின்த் முஹம்மத் ( ரலி ய்ல்லாஹு அன்ஹுமா )
மூமினீன்களின் தாய் என்ற அர்த்தத்தில் சொல்வது மிகவும் சரியானது நாம் கொடுக்கும் மரியாதை அது
ஆயிஷா

உம்முல் மூமினீன் ஆயிஷா பின்த் அபி பக்ர் (
ரலி ய்ல்லாஹு அன்ஹுமா )
ஸஃபியா
உம்முல் மூமினீன் ஸஃபிய்யா பின்த் ஹை ( ரலி ய்ல்லாஹு அன்ஹுமா )

ஸவ்தா

உம்முல் மூமினீன் ஸவ்தா பின்த்
ஸம் ஆ( ரலி ய்ல்லாஹு அன்ஹுமா )

உம்மு ஐமன்

உம்மு ஐமன்
( ரலி ய்ல்லாஹு அன்ஹுமா )


(ரலியல்லாஹு அன்ஹுன்ன)

ஸஹாபாக்கள் பெயர்களில் திருத்தி தந்து மேலும் மெருகூட்டிய சகோதரர் ஜெய்லானி அவர்களுக்கு நன்றி.